உள்ளூர் செய்திகள்
அபூர்வ வகை ஆந்தை

வலையில் சிக்கிய அபூர்வ வகை ஆந்தை

Published On 2022-03-25 13:31 IST   |   Update On 2022-03-25 13:31:00 IST
நாகை அருகே அபூர்வ வகை ஆந்தை வலையில் சிக்கியது.
நாகப்பட்டினம்:

நாகை மாவட்டம் வேளாங்கண்ணி அடுத்த காமேஸ்வரம் தாண்டவ மூர்த்திகாடு பகுதியில் உள்ள அலை அருண் என்பவரது வயலில் கட்டப்பட்டிருந்த மீன் வலையில் இதய வடிவிலான முகம் கொண்ட அபூர்வவகை ஆந்தை சிக்கியது. 

இதனை பார்த்த அலைஅருண் நாகை வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தார். 

உடனடியாக வந்த வனத்துறையினர் ஆந்தையை கைப்பற்றி வனப்பகுதியில் கொண்டு சென்று பறக்கவிட்டனர்.

Similar News