உள்ளூர் செய்திகள்
வேதாரண்யத்தில் உப்பு உற்பத்தி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
வேதாரண்யம்:
தமிழகத்தில் தூத்துக்குடிக்கு அடுத்தபடியாக உப்பு உற்பத்தியில் இரண்டாம் இடம் வகிப்பது வேதாரண்யம். இங்கு உற்பத்தி செய்யப்படுகின்ற உப்பு வெளி மாவட்டங்களுக்கும் வெளிமாநிலங்களுக்கும் அனுப்பப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டுக்கான உப்பு உற்பத்தி தொடங்கபட்ட நிலையில் ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் பருவம் தப்பிய இரு முறை பெய்த மழையால் உப்பு உற்பத்தி தடைபட்டது.
தற்பொழுது வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால் உப்பு உற்பத்தியாளர்கள் 9000 ஏக்கரில் முழுவீச்சில் உற்பத்தி துவங்கி உள்ளனர்.
தற்போது இரவு, பகலாக உப்பு உற்பத்தியில் ஆண் பெண் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
ஆண்களுக்கு நிகராக பெண்களும் மிகக் கடுமையாகவும் உப்பள பகுதிகளில் அனைத்து பணிகளையும் செய்து வருகின்றனர். ஆண்டு தோறும் 6 லட்சம் மெட்ரிக் டன் உப்பு உற்பத்தி நடைபெறும்.
இந்த ஆண்டு உப்பு உற்பத்தி துவக்கத்தில்பருவம் தப்பிய மழையால் இரண்டு மாதம் பாதித்த நிலையில் ஆண்டு இலக்கை எட்ட உப்பள பகுதிகளில் தொழிலாளர்கள் மிக தீவிரமாக பணியாற்றி வருகின்றனர்.