உள்ளூர் செய்திகள்
ஆக்கிரமிப்புகளை அகற்றுவது தொடர்பான ஆலோசனை கூட்டம் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தலைமையில் நடைபெற்றது.

குடியாத்தம் கவுண்டன்ய மகாநதி ஆற்றில் ஆக்கிரமிப்பு வீடுகள் பாரபட்சமின்றி அகற்றப்படும்- கலெக்டர் தகவல்

Published On 2022-03-24 16:33 IST   |   Update On 2022-03-24 16:33:00 IST
குடியாத்தம் கவுண்டன்ய மகாநதி ஆற்றில் ஆக்கிரமிப்பு வீடுகள் பாரபட்சமின்றி அகற்றப்படும் என கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தெரிவித்துள்ளார்.
குடியாத்தம்

வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகரம் கவுண்டன்ய மகாநதி ஆற்றில் ஆக்கிரமித்து கட்டப்பட்டு உள்ள வீடுகளை அகற்றும் பணிகள் குறித்து குடியாத்தம் உதவி கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

அந்தக் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி, குடியாத்தம் உதவி கலெக்டர் தனஞ்செயன், நீர்வள ஆதாரதுறை செயற்பொறியாளர் ரமேஷ், குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமமூர்த்தி, தாசில்தார் லலிதா, நகராட்சி ஆணையாளர் திருநாவுக்கரசு, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் யுவராஜ், சாந்தி, மின் வாரிய உதவி செயற்பொறியாளர் சீனிவாசன் நகர்மன்ற உறுப்பினர் தண்டபாணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அப்போது ஆக்கிரமிப்புகள் அகற்றுவதற்கு கால அவகாசம் அளிக்க வேண்டும் என குடியாத்தம் நெல்லூர்பேட்டை பாவோடும்தோப்பு பொதுமக்கள் சார்பில் நகர மன்ற உறுப்பினர் தண்டபாணி கோரிக்கை விடுத்தார்.

அதனை தொடர்ந்து நிருபர்களை சந்தித்த மாவட்ட கலெக்டர் குமாரவேல் பாண்டியன் கூறியதாவது-வேலூர் மாவட்டம் குடியாத்தம் தாலுகாவில் உள்ள நீர்வழி ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நீதிமன்ற ஆணை மற்றும் தமிழக அரசு உத்தரவின் பேரில் நடைபெற்று வருகிறது. ஆயிரத்திற்கும் அதிகமான வீடுகள் ஆக்கிரமித்து கட்டப்பட்டு உள்ளதாக கணக்கிடப்பட்டது தற்போது 675 வீடுகள் அகக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

 மேலும் 600க்கும் அதிகமான வீடுகள் இடிக்கப்பட வேண்டி யுள்ளது குடியாத்தம் நெல்லூர் பேட்டை பாவோடும்தோப்பு பகுதியில் உள்ளவர்கள் வீடுகளை இடிக்க கால அவகாசம் கேட்டுள்ளனர் கால அவகாசம் அளிப்பதற்கு வாய்ப்பு இல்லை நீதிமன்றத்தில் அறிவுறுத்தல் படியே இந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வருகின்றது. 

ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணிகள் தொடர்ந்து நடைபெறும் கால அவகாசம் வழங்கப்படாது மேலும் அப்பகுதிகளில் உள்ள வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களில் உள்ள மின் இணைப்புகளை துண்டிக்க மாறு மின் வாரியத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்காக வீட்டுமனை வழங்க துரித நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது அதற்கான இடங்கள் பார்வையிட்டு பணிகள் நடைபெற்று வருகிறது பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்படும் வீட்டு மனைகளில் குடியிருப்புகள் கட்டித்தர அனைத்து நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

சீனியாரிட்டி அடிப்படையில் இங்கு குடியிருப்பவர்களுக்கு வீட்டு மனை மற்றும் அதில் வீடுகள் கட்டிக் கொடுக்கப்படும் அதற்காக அப்பகுதியில் உண்மையாக வீட்டுமனை இல்லாதவர்கள் கணக்கெடுக் கப்பட்டு அவர்களுக்கு கட்டாயம் வழங்கப்படும் என தெரிவித்தார்.

Similar News