உள்ளூர் செய்திகள்
அ.தி.மு.க. கவுன்சிலர்கள்

அம்மூர் பேரூராட்சி கூட்டத்தை புறக்கணித்து அ.தி.மு.க. கவுன்சிலர்கள் வெளிநடப்பு

Published On 2022-03-24 16:11 IST   |   Update On 2022-03-24 16:11:00 IST
அம்மூர் பேரூராட்சி கூட்டத்தை புறக்கணித்து அ.தி.மு.க. கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர்.
ராணிப்பேட்டை:

ராணிப்பேட்டை அடுத்த அம்மூர் பேரூராட்சி மன்றத்தின் முதல் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு பேரூராட்சி தலைவர் ஏ.கே.சுந்தரமூர்த்தி தலைமை தாங்கினார். 

துணைத்தலைவர் உஷாராணி அண்ணாதுரை பேரூராட்சி செயல் அலுவலர் சிவராமன் மற்றும் 15 வார்டு கவுன்சிலர்கள் கூட்டத்தில் கலந்துகொண்டனர். 

கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் 27 தீர்மானங்கள் ஒன்றன்பின் ஒன்றாக வாசிக்கப்பட்டன. 

அப்போது அதிமுகவை சேர்ந்த 5 கவுன்சிலர்கள் எழுந்து நின்று தீர்மானங்களில் வெளிப்படைத்தன்மை இல்லை என கூறி கூட்டத்தை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர்.

இதனை தொடர்ந்து தலைவர் துணைத் தலைவர் உட்பட 8பேர் கூட்டத்தில் கலந்துகொண்டு தீர்மானங்களை நிறைவேற்றினர். 

பேரூராட்சி கூட்டத்தை புறக்கணித்து அதிமுக கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Similar News