உள்ளூர் செய்திகள்
கீழ்பென்னாத்தூரில் நகை கடன் தள்ளுபடியில் முறைகேடு நடந்ததாக கூறி பொதுமக்கள் மறியல்
கீழ்பென்னாத்தூர் அருகே நகை கடன் தள்ளுபடியில் முறைகேடு நடந்ததாக கூறி பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர்.
கீழ்பெண்ணாத்தூர்:
திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத் தூர் அடுத்த சோமாசிபாடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் திருவண்ணாமலை செல்லும் சாலையில் உள்ளது.
தமிழக அரசு கடந்த 2021-ம் ஆண்டு மார்ச் 31-ந் தேதி வரை 5 பவுன் (40 கிராம்) வரையிலான தங்க நகைக் கடன் பெற்றவர்களுக்கு தள்ளுபடி செய்தது.
இங்கு போது நகை கடனாக மேற்கண்ட தேதி வரை மொத்தம் 2 ஆயிரத்து 389 பேர் பெற்றுள்ளனர். இதில் தகுதி உள்ள பயணாளிகளுக்கு 333 பேருக்கு தள்ளுபடி செய்து இருப்பதாக கூட்டுறவு கடன் சங்கத்தில் அறிவிப்புப் பலகையில் விவரங்கள் அடங்கிய பட்டியல் ஒட்டப்பட்டிருந்தது.
நிலமற்ற உறுப்பினர்களுக்கு நகை கடன் தள்ளுபடி பட்டியலில் பயிர் கடன் தள்ளுபடி வந்ததாக குறிப்பிடப்பட்டிருந்தது.
மேலும் 5 பவுனுக்கும் குறைவாக நகை கடன் பெற்றவர்களுக்கு கடன் தள்ளுபடி வராததாலும் 200க்கும் மேற்பட்டவர்கள் நேற்று அந்த பகுதியில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.
போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது நகை கடன் தள்ளுபடியில் முறைகேடு நடந்ததாக பொதுமக்கள் குற்றம்சாட்டினர். நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதியளித்ததை அடுத்து மறியலை கைவிட்டனர்.
இதனால் அந்தப் பகுதியில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.