உள்ளூர் செய்திகள்
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்.

ஆரணியில் பொதுமக்கள் நூதன போராட்டம்

Published On 2022-03-24 16:01 IST   |   Update On 2022-03-24 16:01:00 IST
ஆரணியில் பொதுமக்கள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆரணி:

ஆரணி அருகே வீட்டை காலி செய்ய மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியதை கண்டித்து 200க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பாடை கட்டி நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே பையூர் ஊராட்சிக்குபட்ட எம்.ஜி.ஆர் நகரில் சுமார் 400 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
இந்த பகுதியில் நீர்பிடிப்பு பகுதியில் பல ஆண்டுகளாக வீடு கட்டி வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது.

மேலும் கோர்ட்டு உத்தரவின் பேரில் மாவட்ட நிர்வாகம் எம்.ஜி.ஆர் நகரில் உள்ள குடியிருப்பு வாசிகளுக்கு வீடு காலி செய்ய நோட்டீஸ் அனுப்பபட்டுள்ளன.

இதனை கண்டித்தும் பல ஆண்டுகளாக எம்.ஜி.ஆர் நகரில் வாழம் பொதுமக்களுக்கு பட்டா வழங்க கோரி பல முறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்காத காரணத்தினாலும் சுமார் 200க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வீடு உருவம் கொண்ட அட்டைக்கு பாடை கட்டி ஆரணி ஓன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு கோஷங்கள் எழுப்பினர்.

பின்னர் வட்டார வளர்ச்சி திட்ட அலுவலர் சீனிவாசனிடம் பட்டா  வழங்க கோரி பொதுமக்கள் மனு அளித்ததனர்.

மேலும் எம்.ஜி.ஆர் நகர் பகுதியில் நீர்பிடிப்பு பகுதியாக உள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளன ஆனால் பல ஆண்டுகளாக வாழ்ந்து வருவதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.
 
தற்போது எம்.ஜி.ஆர் பகுதியில் குடியிருப்பு வாசிகளை காலி செய்தால் சுடுகாட்டில் தான் சுமார் 350 குடும்பத்தினர் வாழ வேண்டும் எனவும் வேதனையுடன் தெரிவித்தனர்.

இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Similar News