உள்ளூர் செய்திகள்
கடற்கரையில் பலத்த சூறைக்காற்றில் தூக்கி வீசப்பட்ட வலை
கோடியக்கரை கடற்கரையில் பலத்த சூறைக்காற்றில் மீன்பிடி வலைகட்டை 50 அடி உயரத்திற்கு தூக்கி வீசப்பட்டது.
வேதாரண்யம்:
நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த கோடியக்கரை கடலில் இன்று காலை திடீர் நீரோட்டம் மாற்றம் ஏற்ப்பட்டதால் சூறைகாற்று வீசியது. இந்த சூறைகாற்று கடலில் இருந்து கிளம்பி தரையை நோக்கி வந்தது. அப்பொழுது கடற்கரையில் அடுக்கி வைத்திருந்த சுமார் 100 கிலோ எடை கொண்ட மீன்பிடி வலைகட்டை 50 அடி உயரத்திற்கு தூக்கி வீசப்பட்டது.
மேலும் கடற்கரையில் இருந்த கீற்று கொட்டகைகள் காற்றில் பறந்தன . இதை பார்த்த மீனவர்கள் அச்சம் அடைந்து கூச்சல் போட்டு கொண்டு ஓட்டம் பிடித்தனர்.சுமார் 5 நிமிடம் வீசிய இந்த காற்றால் கடற்கரை மிகுந்த பரபரப்பாக காணப்பட்டது.
கடற்கரையில் மீனவர்கள் எடுத்த இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த கோடியக்கரை கடலில் இன்று காலை திடீர் நீரோட்டம் மாற்றம் ஏற்ப்பட்டதால் சூறைகாற்று வீசியது. இந்த சூறைகாற்று கடலில் இருந்து கிளம்பி தரையை நோக்கி வந்தது. அப்பொழுது கடற்கரையில் அடுக்கி வைத்திருந்த சுமார் 100 கிலோ எடை கொண்ட மீன்பிடி வலைகட்டை 50 அடி உயரத்திற்கு தூக்கி வீசப்பட்டது.
மேலும் கடற்கரையில் இருந்த கீற்று கொட்டகைகள் காற்றில் பறந்தன . இதை பார்த்த மீனவர்கள் அச்சம் அடைந்து கூச்சல் போட்டு கொண்டு ஓட்டம் பிடித்தனர்.சுமார் 5 நிமிடம் வீசிய இந்த காற்றால் கடற்கரை மிகுந்த பரபரப்பாக காணப்பட்டது.
கடற்கரையில் மீனவர்கள் எடுத்த இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.