உள்ளூர் செய்திகள்
தீப்பிடித்து எரிந்த கார்.

பல்லடம் அருகே நடுரோட்டில் தீப்பிடித்து எரிந்த கார்

Published On 2022-03-24 06:04 GMT   |   Update On 2022-03-24 06:04 GMT
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே நடுரோட்டில் கார் தீப்பிடித்து எரிந்ததில் 2 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
பல்லடம்:

பொள்ளாச்சியை சேர்ந்தவர் மணிகண்டன். இவர் தனது நண்பர் அசோக்குமாரை அழைத்துக்கொண்டு திருப்பூரில் உள்ள உறவினர் வீட்டிற்கு நேற்றிரவு வந்தார்.

பின்னர் இரவு பொள்ளாச்சிக்கு காரில் புறப்பட்டனர். பல்லடம்-பொள்ளாச்சி சாலை வடுகபாளையம் பகுதியில் சென்று கொண்டிருந்த போது திடீரென காரின் முன்பக்க என்ஜின் பகுதியில் இருந்து கரும்புகை வெளியேறியது. பின்னர் திடீரென கார் தீப்பிடித்து எரிய தொடங்கியது. இதில் காரில் இருந்த மணிகண்டன், அசோக்குமார் ஆகியோர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

மேலும் காரில் பிடித்த தீயை அணைக்க முயன்றனர். ஆனால் முடியவில்லை. உடனே பல்லடம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைத்தனர். இருப்பினும் கார் முற்றிலும் தீப்பிடித்து எரிந்து நாசமானது. தீ விபத்துக்கான காரணம் குறித்து பல்லடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News