உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்

அரக்கோணம் அருகே மதுவில் விஷம் கலந்து குடித்த பெயிண்டர் சாவு

Published On 2022-03-23 16:11 IST   |   Update On 2022-03-23 16:11:00 IST
அரக்கோணம் அருகே மதுவில் விஷம் கலந்து குடித்த பெயிண்டர் பரிதாபமாக இறந்தார்.
நெமிலி:

தக்கோலம் அடுத்த நகிரி குப்பத்தை சேர்ந்தவர் கார்த்திக் (வயது26). பெயிண்டர் வேலை செய்து வந்தார். சம்பவத்தன்று விஷத்தை மதுவில் கலந்து குடித்ததில் மயங்கி விழுந்தார்.

 இதனை கண்ட அருகிலிருந்தவர்கள் கார்த்தியை மீட்டு அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். 

அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று காலை பரிதாபமாக இறந்தார். கார்த்தி இறந்ததற்கான காரணம் குறித்து தக்கோலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News