உள்ளூர் செய்திகள்
புதுக்கோட்டை அரசு குழந்தைகள் காப்பக மாணவிகளுக்கான மருத்துவ பரிசோ தனை முகாம் சென்ட்ரல் ரோட்டரி சங்க தலைவர் பெர்

மாணவிகளுக்கு மருத்துவ பரிசோதனை

Published On 2022-03-23 15:48 IST   |   Update On 2022-03-23 15:48:00 IST
புதுக்கோட்டையில் காப்பகத்தில் தங்கி படித்து வரும் அரசு பள்ளி மாணவர்களுக்கான மருத்துவ பரிசோதனை முகாம் நடைபெற்றது.

புதுக்கோட்டை:

புதுக்கோட்டை அன்னை சத்யா அம்மையார் நினைவு அரசு குழந்தைகள் காப்பக மாணவிகளுக்கான பொதுமருத்துவம், பல் மற்றும் கண் பரிசோதனை முகாமினை குழந்தைகள் காப்பக வளாகத்தில் புதுக்கோட்டை சென்ட்ரல் ரோட்டரி சங்கம் நடத்தியது.

முகாமிற்கு புதுக்கோட்டை சென்ட்ரல் ரோட்டரி சங்க தலைவர் பொறியாளர் பெர்லின் தாமஸ் தலைமை தாங்கினார். முன்னாள் தலைவர்கள் ஜெய்பார்த்தீபன், ஓவியர் ரவி, கதிரேசன், மனோகரன், ஜான் பிரபு, சத்தியராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ரோட்டரி மாவட்டம் 3000&த்தின் துணை ஆளுநர் சிவாஜி சிறப்பு விருந்தினராக  கலந்து கொண்டு இம்முகாமினை துவக்கி வைத்தார்.  

இந்த மருத்துவ பரிசோதனை முகாமில் மகப்பேறு மருத்துவர் ஜான்சிராணி முனியன், பல் மருத்துவர் மேரி கிறிஸ்டினா பெர்லின், அரசு முதுநிலை கண் பரிசோதகர் அன்னை பார்த்திபன் ஆகியோர் பங்கேற்று காப்பகத்தில் உள்ள அனைத்து மாணவிகளுக்கும் மருத்துவ பரிசோதனைகளை மேற்கொண்டனர்.

மேலும், மாணவிகள் அனைவருக்கும் தேவையான மருந்து, மாத்திரைகள், டூத்பிரஷ்  மற்றும் எழுது பொருட்களும் சங்கத்தின் சார்பாக வழங்கப்பட்டது.

இம்முகாமிற்கான ஏற்பாடுகளை காப்பாளர் பரமேஸ்வரி உள்ளிட்ட ரோட்டரி நிர்வாகிகள் செய்திருந்தனர். நிறைவில் சங்கத்தின் செயலாளர் பொறியாளர் கார்த்திகேயன் நன்றி கூறினார்.

Similar News