உள்ளூர் செய்திகள்
போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்த ஆயத்த கூட்டம்
வேலூரில் போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்த ஆயத்த கூட்டம் நடந்தது.
வேலூர்:
வேலூர் ரங்காபுரத்தில் உள்ள அரசு போக்குவரத்து பணிமனை முன்பாக அரசு போக்குவரத்து தொழிலாளர்கள் பொது வேலை நிறுத்த ஆயத்த கூட்டம் இன்று நடந்தது.
எல்.பி.எப் பொதுச்செயலாளர் ரமேஷ் தலைமை தாங்கினார். ரவிச்சந்திரன் ராமதாஸ் தமிழ்ச்செல்வன் சிகாமணி பாரதிக்குமார் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
வரும் மார்ச் 28,29 தேதிகளில் மத்திய அரசின் மக்கள் விரோத தொழிலாளர் விரோத விவசாயிகளுக்கு எதிரான போக்கை கண்டித்து பொது வேலைநிறுத்தம் நடைபெற உள்ளது.
இதுகுறித்து வேலை நிறுத்த ஆயத்த கூட்டம் நடத்தப்பட்டதாக தெரிவித்தனர்.