உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்

மர்மமான முறையில் இறந்து கிடந்த மயில்கள்

Published On 2022-03-23 15:39 IST   |   Update On 2022-03-23 15:39:00 IST
பெருந்துறை அருகே மர்மமான முறையில் இறந்து கிடந்த மயில்கள் குறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு:

பெருந்துறை அருகே மர்மமான முறையில் இறந்து கிடந்த மயில்கள் குறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஈரோடு மாவட்டம் பெருந்துறை அடுத்த சீனாபுரத்தில் உள்ள ஒரு விவசாய தோட்டத்தில்  நேற்று இரவு 7 மயில்கள் மர்மமான முறையில் இறந்து கிடந்தன.  விஷம் கலந்த உணவை சாப்பிட்டதால் மயில்கள்  இறந்ததா? அல்லது வேறு ஏதும்  காரணம் உள்ளதா? என்பது குறித்து உடனடியாக தகவல் தெரியவில்லை.

இதுகுறித்து திங்களூர் போலீசாருக்கும்,  பெருந்துறை வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக் கப்பட்டது.  வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து  இறந்து கிடந்த மயில்கள் உடல்களை கைப்பற்றி மருத்துவ பரிசோதனைக்காக எடுத்து சென்றனர்.  பிரேதப் பரிசோதனை முடிவில் தான் மயில்கள் எவ்வாறு இருந்தது என தெரியவரும்.

இதுகுறித்து வனத்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News