உள்ளூர் செய்திகள்
வீரமாகாளியம்மன் கோவிலில் மது எடுப்பு விழா நடந்த காட்சி.

வீரமாகாளியம்மன் கோவிலில் மது எடுப்பு விழா

Published On 2022-03-23 15:21 IST   |   Update On 2022-03-23 15:21:00 IST
வீரமாகாளியம்மன் கோவிலில் மது எடுப்பு விழா நடைபெற்றது.
புதுக்கோட்டை :

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகேயுள்ள வம்பன் வீரமாகாளியம்மன் 64-ம் ஆண்டு கோவில் திருவிழா காப்பு கட்டுதல் முளைப்பாரிக்கு விதைபாவுதலுடன் தொடங்கியது. கிராம மக்களால் நடத்தப்பட்ட முளைப்பாரி திருவிழா தொடங்கி இன்று காலை மதுயெடுப்பு நடந்தது.

 மது எடுப்பு திருவிழாவை முன்னிட்டு கிராம மக்கள் பொது குடத்தில் நவதானியங்களை நிரப்பி அதில் தென்னை மது, போன்றவைகளை வைத்து, அலங்கரித்தனர். பின்னர் தாரை தப்பட்டைகள் முழங்க வாணவேடிக்கைகளுடன் ஊர்வலமாக வீரமா காளியம்மன் கோவிலுக்கு வந்தடைந்தனர்.

பின் கோவிலை சுற்றி வந்து அருகில் பாளைகளை குளத்தில் கொண்டு வந்து நெல்லையும் கொட்டிவிட்டு தரிசனம் செய்தனர்.

Similar News