உள்ளூர் செய்திகள்
வரத்து வாரியில் ஆபரணங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை :
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகேயுள்ள கல்லாலங்குடி ஊராட்சியில் அப்பகுதியில் உள்ள வரத்துவாரியை 100 நாள் வேலைப்பணியாளர்கள் தூர்வாரியுள்ளனர்.
அப்போது, நாணயங்கள், குண்டுமணிகள் என மொத்தம் 80 கிராம் எடையிலான ஆபரணங்கள் கிடைத்துள்ளன. இதைத்தொடர்ந்து, அப்பகுதி மக்கள் ஊராட்சித் தலைவர் மலர் தலைமையில் வட்டாட்சியர் செந்தில்நாயகியிடம் ஒப்படைத்தனர்.
அவற்றைப் பெற்றுக்கொண்ட வட்டாட்சியர் செந்தில்நாயகி, கிடைத்த பொருள்களை புதுக்கோட்டை அருங்காட்சியகத்தில் ஒப்படைத்து, அதன் காலம், உலோகம், தன்மை குறித்து ஆய்வு செய்து அரசுக்குத் தெரிவிப்பார்கள் என்றார்.
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகேயுள்ள கல்லாலங்குடி ஊராட்சியில் அப்பகுதியில் உள்ள வரத்துவாரியை 100 நாள் வேலைப்பணியாளர்கள் தூர்வாரியுள்ளனர்.
அப்போது, நாணயங்கள், குண்டுமணிகள் என மொத்தம் 80 கிராம் எடையிலான ஆபரணங்கள் கிடைத்துள்ளன. இதைத்தொடர்ந்து, அப்பகுதி மக்கள் ஊராட்சித் தலைவர் மலர் தலைமையில் வட்டாட்சியர் செந்தில்நாயகியிடம் ஒப்படைத்தனர்.
அவற்றைப் பெற்றுக்கொண்ட வட்டாட்சியர் செந்தில்நாயகி, கிடைத்த பொருள்களை புதுக்கோட்டை அருங்காட்சியகத்தில் ஒப்படைத்து, அதன் காலம், உலோகம், தன்மை குறித்து ஆய்வு செய்து அரசுக்குத் தெரிவிப்பார்கள் என்றார்.