உள்ளூர் செய்திகள்
காலி பணி இடங்களை நிரப்பகோரி வருவாய்துறை அலுவலர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அலுவலகங்களில் இருந்து வெளிநடப்பு செய்து ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.
கடலூர்:
தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில் துணை தாசில்தார் பட்டியல் திருத்தம் காரணமாக அனைத்து நிலைகளிலும் பணியிறக்கம் பாதிப்புகளை முழுமையாக சரி செய்ய வேண்டும்.
முதுநிலை வருவாய் ஆய்வாளர் பதவி உயர்வுக்கு அடிப்படை மற்றும் நில அளவை பயிற்சி பெறாத நிலையிலும் நிபந்தனை அடிப்படையில் பதவி உயர்வு வழங்க வேண்டும். காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அலுவலகங்களில் இருந்து வெளிநடப்பு செய்து ஆர்ப்பாட் டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.
அதன்படி கடலூர் கலெக்டர் அலுவலகம், தாலுகா அலுவலகம் உள்ளிட்ட மாவட்டம் முழுவதும் பல்வேறு அலுவலகங்களில் பணியாற்றி வந்த வருவாய்த்துறையினர் வெளிநடப்பு செய்து கலெக்டர் அலுவலகத்தில் ஒன்று திரண்டு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் மகேஷ் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் ஆறுமுகம், மாவட்ட துணைத்தலைவர் பூ பாலச்சந்திரன், தாசில்தார் ஸ்ரீதரன், துணை தலைவர் ராஜேஷ் பாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதனை தொடர்ந்து தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் மகளிர் அணி ஜான்சிராணி, மத்திய செயற்குழு உறுப்பினர் ரத்தின குமரன், அமர்நாத், பார்த்திபன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.