உள்ளூர் செய்திகள்
மதநல்லிணக்க சந்தனக்கூடு விழா நடந்தது.

மதநல்லிணக்க சந்தனக்கூடு விழா

Published On 2022-03-22 15:22 IST   |   Update On 2022-03-22 15:22:00 IST
கோடியக்காட்டில் மதநல்லிணக்க சந்தனக்கூடு விழா நடந்தது.
வேதாரண்யம்:

வேதாரண்யம் அடுத்த கோடியக்காடு அவுலியாக்கன்னி ஒலியுல்லாஹ் தர்காவில் சந்தனக்கூடு விழா நடைபெற்றது. 

முன்னதாக கோடியக்கரை முகைதீன்பள்ளி வாசலிலிருந்து மின்விளக் குகளால் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் சந்தனம் அவுலியாக்களின் ஒலியுல்லா தர்காவிற்கு முக்கிய வீதிகள் வழியாக 5 கிலோமீட்டர் தூரம் எடுத்து வரப்பட்டது. 

வழிநெடுகிலும் மத நல்லிணக்கத்தை போற்றும் வகையில் இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர்கள் என மும்மதத்தைச் சேர்ந்தவர்களும் சந்தனக்கூடு ஊர்வலத்தில் கலந்து கொண்டு சந்தனக்கூட்டிற்கு முந்திரி, திராட்சை, ஊதுபத்தியை காணிக்கையாக வழங்கினர். 

சந்தனக்கூடு ஊர்வலம் கோடியக்காடு அவுலியாகன்னி ஒலியுல்லா தர்காவிற்கு வந்து சந்தனம் பூசும் நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சியில் கோடியக்காடு ஊராட்சி மன்ற தலைவர் தமிழ் மணி, விழா குழு தலைவர் ஜின்னா மற்றும் விழா கமிட்டி உறுப்பினர்கள் அஜ்மீர்கான், அலிமெக்தர், சாபீக் ,கல்பான், இம்ராஜ் மற்றும் ஜாமத் மன்றத்தினர் கலந்துகொண்டானர்.

Similar News