உள்ளூர் செய்திகள்
அரசு பள்ளி கடவுள் கொடுத்த வரம் கூட்டத்தில் கலெக்டர் பேச்சு
தோப்புத்துறையில் நடந்த மேலாண்மை குழு கூட்டத்தில் அரசு பள்ளி கடவுள் கொடுத்த வரம் என கலெக்டர் அருண்தம்புராஜ் பேசியுள்ளார்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் அடுத்த தோப்புத்துறை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நடைபெற்றது. பள்ளி தலைமை ஆசிரியர் தெட்சணமுர்த்தி வரவேற்றார்.
நாகை மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் தலைமை தாங்கி பேசியதாவது:-
பெற்றோர்களுக்கு பள்ளி மேலாண்மை குழுவின் முக்கியத்துவம் குறித்தும் இலவச கட்டாய கல்வி மற்றும் பள்ளிக்கும் பெற்றோருக்கும் இடையிலான உறவு பள்ளிகளின் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல் மாணவர்களுக்கு தரமான கல்வி வழங்குதல் ஆகிய தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். அரசு பள்ளி என்பது கடவுள் கொடுத்த வரம்.
பள்ளிக்குச் செல்லும் தங்களது குழந்தைகளை கண்காணிப்பதில் பெற்றோர்கள் கவனம் செலுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
முன்னதாக பள்ளியில் சிறப்பாக கற்பித்த ஆசிரியை னிதாவிற்கு புத்தகத்தை பரிசு வழங்கி பாராட்டினார்.இதில் நாகை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மதிவாணன், உதவி தொடக்கக் கல்வி அலுவலர்கள் ராஜமாணிக்கம், விமலா, தாசில்தார் ரவிச்சந்திரன், பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர் கலந்து கொண்டனர்.