உள்ளூர் செய்திகள்
FILEPHOTO

சூறைக்காற்றுடன் மழை

Published On 2022-03-22 13:21 IST   |   Update On 2022-03-22 13:21:00 IST
சூறைக்காற்றுடன் மழை பெய்ததால் வீடுகள் இடிந்தன.
புதுக்கோட்டை:

கந்தர்வகோட்டை பகுதியில்  கனத்த மழையுடன் சூறைக்காற்று திடீரென வீசியது. இதில் நகரி பகுதியில் மின்சார கம்பிகள் அறுந்து விழுந்தது. இதனால் நள்ளிரவு வரை மின்சாரம் தடை செய்யப்பட்டது.

மரங்கள் முறிந்து விழுந்தது. மேலும் கடைவீதியில் உள்ள பெயர் பலகைகள் காற்றில் அடித்துச் செல்லப்பட்டது. அம்பலகாரர் தெருவைச் சேர்ந்தவர் மாரியம்மாளின்  குடிசை வீடு இடிந்து விழுந்தது.

வீடு இடிந்து விழுந்ததில் வீட்டில் உள்ள பாத்திரங்கள் மற்றும் துணிமணிகள் உள்ளிட்ட 10 ஆயிரம் மதிப்புள்ள பொருட்கள் வீணானது. தகவல் அறிந்து கிராம நிர்வாக அலுவலர் அன்பரசன், ஊராட்சி மன்ற தலைவர் தமிழ்செல்வி, தி.மு.க. நகர செயலாளர் ராஜா ஆகியோர் சேதமடைந்த வீட்டை பார்வையிட்டு அரசுக்கு தகவல் அளித்தனர்.

Similar News