உள்ளூர் செய்திகள்
உலக வன தினத்தை முன்னிட்டு பள்ளியில் மரக்கன்றுகள் நடப்பட்டது.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் தெற்கு வாண்டான் விடுதி தொடக்கப் பள்ளியில் உலக வன தினத்தை முன்னிட்டு, பள்ளி மேலாண்மைக் குழு கூட்டம் மற்றும் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது. கூட்டத்திற்கு மேலாண்மை குழு தலைவர் பேபி ஷாலினி தலைமை தாங்கினார்,
தலைமை ஆசிரியர் சின்னராஜா அனைவரையும் வரவேற்று பேசியபோது. கூட்டத்தில் மாணவர்கள் சேர்க்கையை உயர்த்துதல், பள்ளியை எவ்வாறு வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்வது, தமிழக அரசு திட்டங்கள் அரசு பள்ளி மாணவர்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு வகையான நலத் திட்டங்களை தமிழக அரசு வழங்கி வருவதாக தெரிவித்தார்.
கூட்டத்தில் ஊராட்சிமன்றத் தலைவர் அருணாச்சலம், வட்டார வள மைய மேற்பார்வையாளர் பிரகாஷ் , இல்லம் தேடி கல்வி திட்ட தன்னார் வலர்கள் பாண்டிச்செல்வி, நந்தினி மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் உலக வன தினத்தை முன்னிட்டு பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டது.
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் தெற்கு வாண்டான் விடுதி தொடக்கப் பள்ளியில் உலக வன தினத்தை முன்னிட்டு, பள்ளி மேலாண்மைக் குழு கூட்டம் மற்றும் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது. கூட்டத்திற்கு மேலாண்மை குழு தலைவர் பேபி ஷாலினி தலைமை தாங்கினார்,
தலைமை ஆசிரியர் சின்னராஜா அனைவரையும் வரவேற்று பேசியபோது. கூட்டத்தில் மாணவர்கள் சேர்க்கையை உயர்த்துதல், பள்ளியை எவ்வாறு வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்வது, தமிழக அரசு திட்டங்கள் அரசு பள்ளி மாணவர்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு வகையான நலத் திட்டங்களை தமிழக அரசு வழங்கி வருவதாக தெரிவித்தார்.
கூட்டத்தில் ஊராட்சிமன்றத் தலைவர் அருணாச்சலம், வட்டார வள மைய மேற்பார்வையாளர் பிரகாஷ் , இல்லம் தேடி கல்வி திட்ட தன்னார் வலர்கள் பாண்டிச்செல்வி, நந்தினி மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் உலக வன தினத்தை முன்னிட்டு பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டது.