உள்ளூர் செய்திகள்
FILEPHOTO

பி.எஸ்.என்.எல். அலுவலகத்திற்கு சீல்

Published On 2022-03-22 12:49 IST   |   Update On 2022-03-22 12:49:00 IST
பி.எஸ்.என்.எல். அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
புதுக்கோட்டை:

புதுக்கோட்டை மேல ராஜவிடுதியில் பிஎஸ்என்எல் அலுவலகம் உள்ளது. இதற்கான சொத்து வரியை கடந்த 2015-ம் ஆண்டு முதல் செலுத்தவில்லை என கூறப்படுகிறது.

இதையடுத்து நிலுவையில் உள்ள ரூ.17.50 லட்சத்தை உடனே செலுத்துமாறு நகராட்சி நிர்வாகம் பல முறை நோட்டீஸ் அனுப்பியும் பிஎஸ்என்எல் நிர்வாகம் சொத்துவரியை செலுத்தவில்லை.

இதையடுத்து, நகராட்சி வருவாய் அலுவலர் விஜயாஸ்ரீ தலைமையிலான நகராட்சி பணியாளர்கள், பிஎஸ்என்எல் அலுவலகத்தின் ஒரு அறையை பூட்டி சீல் வைத்தனர். மேலும் அங்கிருந்த மேஜை, நாகாலி உள்ளிட்ட சில பொருட்களை ஜப்தி செய்தனர்.

இதனால் பிஎஸ்என்எல் அலுவலர்களுக்கும், நகராட்சி அலுவலர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

Similar News