உள்ளூர் செய்திகள்
ஜல் ஜீவன் திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து ஆலோசிப்பதற்காக இன்று சிறப்பு கிராம சபைக்கூட்டம் நடைபெற்றது.
புதுக்கோட்டை:
மத்திய அரசின் திட்டமான ஜல் ஜீவன் திட்டம் மூலம் 2024-ம் ஆண்டுக்குள் அனைத்து வீடுகளுக்கும் தினமும் தலா 55 லிட்டர் குடிநீர் கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் குடிநீர் இணைப்பு வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
புதுக்கோட்டை மாவட்டத்தில் 2 நகராட்சிகள், 8 பேரூராட்சிகள் மற்றும் 497 ஊராட்சிகள் உள்ளன. இவற்றில் ஊரக பகுதியில் பெரியாளூர், வேம்பங்குடி, கே.ராயவரம், திருவாக்குடி, பிசானத்தூர், துருகப்பட்டி, வழமங்களம், களமாவூர் ஆகிய 8 ஊராட்சிகளில் அனைத்து குடும்பங்களுக்கும் குடிநீர் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து ஆலோசிப்பதற்காக இன்று சிறப்பு கிராம சபைக்கூட்டம் நடைபெற உள்ளது.
இது குறித்து கலெக்டர் கவிதா ராமு விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது :
ஜல் ஜீவன் திட்டத்தின் மூலம் மாவட்டத்தில் 8 ஊராட்சிகளிலுள்ள அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ஊராட்சிகளில் உலக தண்ணீர் தினத்தை (மார்ச்22) சிறப்பிக்கும் வகையில் சிறப்பு கிராம சபைக்கூட்டம் நடைபெற உள்ளது என தெரிவித்தள்ளார்.
மத்திய அரசின் திட்டமான ஜல் ஜீவன் திட்டம் மூலம் 2024-ம் ஆண்டுக்குள் அனைத்து வீடுகளுக்கும் தினமும் தலா 55 லிட்டர் குடிநீர் கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் குடிநீர் இணைப்பு வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
புதுக்கோட்டை மாவட்டத்தில் 2 நகராட்சிகள், 8 பேரூராட்சிகள் மற்றும் 497 ஊராட்சிகள் உள்ளன. இவற்றில் ஊரக பகுதியில் பெரியாளூர், வேம்பங்குடி, கே.ராயவரம், திருவாக்குடி, பிசானத்தூர், துருகப்பட்டி, வழமங்களம், களமாவூர் ஆகிய 8 ஊராட்சிகளில் அனைத்து குடும்பங்களுக்கும் குடிநீர் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து ஆலோசிப்பதற்காக இன்று சிறப்பு கிராம சபைக்கூட்டம் நடைபெற உள்ளது.
இது குறித்து கலெக்டர் கவிதா ராமு விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது :
ஜல் ஜீவன் திட்டத்தின் மூலம் மாவட்டத்தில் 8 ஊராட்சிகளிலுள்ள அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ஊராட்சிகளில் உலக தண்ணீர் தினத்தை (மார்ச்22) சிறப்பிக்கும் வகையில் சிறப்பு கிராம சபைக்கூட்டம் நடைபெற உள்ளது என தெரிவித்தள்ளார்.