உள்ளூர் செய்திகள்
பண்ருட்டியில் ஆட்டோ மீது கார் மோதி விபத்து- டிரைவர் பலி
கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் ஆட்டோ மீது கார் மோதியதில் டிரைவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
பண்ருட்டி:
கடலூர் மாவட்டம் பண்ருட்டி, திருவதிகை செட்டிப்பட்டறை காலனியை சேர்ந்தவர் பிரபு, (வயது 37). ஆட்டோ டிரைவர், இவருக்கு மனைவி மற்றும் 2 மகன்கள் உள்ளனர்.
இவர், பண்ருட்டி கடலூர் சாலை திருவதிகை அருகே குட்டை தெரு பஸ் நிறுத்தம் அருகே நேற்று இரவு ஆட்டோ ஓட்டி சென்றார்.
அப்போது அதிவேகமாக எதிரே வந்த கார் மோதியதில் பலத்த காயமடைந்து பிரபு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனால் பண்ருட்டி கடலூர் ரோட்டில் சிறிது நேரம் போக்குவரத்து பாதித்தது.
இதுபற்றி தகவல் அறிந்ததும் பண்ருட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போக்குவரத்தை சரி செய்தனர். விபத்தில் பலியான பிரபு உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்து கார் டிரைவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடலூர் மாவட்டம் பண்ருட்டி, திருவதிகை செட்டிப்பட்டறை காலனியை சேர்ந்தவர் பிரபு, (வயது 37). ஆட்டோ டிரைவர், இவருக்கு மனைவி மற்றும் 2 மகன்கள் உள்ளனர்.
இவர், பண்ருட்டி கடலூர் சாலை திருவதிகை அருகே குட்டை தெரு பஸ் நிறுத்தம் அருகே நேற்று இரவு ஆட்டோ ஓட்டி சென்றார்.
அப்போது அதிவேகமாக எதிரே வந்த கார் மோதியதில் பலத்த காயமடைந்து பிரபு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனால் பண்ருட்டி கடலூர் ரோட்டில் சிறிது நேரம் போக்குவரத்து பாதித்தது.
இதுபற்றி தகவல் அறிந்ததும் பண்ருட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போக்குவரத்தை சரி செய்தனர். விபத்தில் பலியான பிரபு உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்து கார் டிரைவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.