உள்ளூர் செய்திகள்
ஏரி தூர்வாரும் பணி தொடக்கம்.

100 ஆண்டுகளுக்கு பிறகு ஏரி தூர்வாரும் பணி

Published On 2022-03-21 16:00 IST   |   Update On 2022-03-21 16:00:00 IST
வேளாங்கண்ணி அருகே 100 ஆண்டுகளுக்கு பிறகு ஏரி தூர்வாரும் பணி தொடங்கியது.
நாகப்பட்டினம்:

நாகை மாவட்டம் வேளாங்கண்ணி அடுத்துள்ள பிரதாபராமபுரம் ஊராட்சியில் 100 ஆண்டுகளுக்கு மேலாக தூர்வாரப்படாமலிருந்த பெரிய ஏரி தூர்வாரும் பணிகள் பூமிபூஜை செய்து தொடங்கப்பட்டது. இந்த ஏரி மூலமாக பிரதாபராமபுரம், காமேஸ்வரம், பூவைத்தேடி, செருதூர், திருப்பூண்டி, விழுந்தமாவடி, தலையாமழை உள்ளிட்ட பகுதிகளிலுள்ள சுமார் 1000 ஏக்கர் விவசாயம் பயன்பெறுவதுடன் நிலத்தடி நீர்மட்டம் உயரும் வகையில், கிராம மக்கள் மற்றும் தன்னார்வலர்கள் காவிரி மருத்துவமனை மற்றும் மில்கி மிஸ்ட் நிறுவனம் நிதியுதவியுடன் இணைந்து பெரிய ஏரியை ராட்சத ஜேசிபி மூலம் தூர்வாரும் பணி தொடங்கியது.

இந்த நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற தலைவர் சிவராசு, ஒன்றிய கவுன்சிலர் ஆறுமுகம், சமூக ஆர்வலர் நிமல்ராகவன், மற்றும் கிராம விவசாயிகள் கலந்து கொண்டனர்.

Similar News