உள்ளூர் செய்திகள்
பத்திரகாளியம்மன் கோவில் பங்குனி உத்திர திருவிழா
திருமருகல் அருகே பத்திரகாளியம்மன் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா நடந்தது.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம், திருமருகலை அடுத்த பண்டாரவடை ஊராட்சி தென்பிடாகையில் பத்ரகாளியம்மன் கோவில் உள்ளது. பல்வேறு சிறப்புகள் பெற்ற இந்த கோவிலில் பங்குனி உத்திர திருவிழா 16-ம் தேதி காப்பு கட்டியதுடன் தொடங்கியது. தொடர்ந்து பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்து பத்ரகாளியம்மனுக்கு அபிஷேக, ஆராதனை செய்யப்பட்டது. பின்னர் யாக சாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனிதநீர் அடங்கிய கலசங்களை எடுத்து சென்று சாமிக்கு அபிஷேகம் நடந்தது.
இதை தொடர்ந்து அபிஷேக ஆராதனையும், சந்தனக்காப்பு அலங்காரம், மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் சாமி வீதி உலா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள், கிராம மக்கள் செய்திருந்தனர்.
நாகை மாவட்டம், திருமருகலை அடுத்த பண்டாரவடை ஊராட்சி தென்பிடாகையில் பத்ரகாளியம்மன் கோவில் உள்ளது. பல்வேறு சிறப்புகள் பெற்ற இந்த கோவிலில் பங்குனி உத்திர திருவிழா 16-ம் தேதி காப்பு கட்டியதுடன் தொடங்கியது. தொடர்ந்து பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்து பத்ரகாளியம்மனுக்கு அபிஷேக, ஆராதனை செய்யப்பட்டது. பின்னர் யாக சாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனிதநீர் அடங்கிய கலசங்களை எடுத்து சென்று சாமிக்கு அபிஷேகம் நடந்தது.
இதை தொடர்ந்து அபிஷேக ஆராதனையும், சந்தனக்காப்பு அலங்காரம், மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் சாமி வீதி உலா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள், கிராம மக்கள் செய்திருந்தனர்.