உள்ளூர் செய்திகள்
ராணிப்பேட்டையில் தீக்குளித்து பெண் தற்கொலை
ராணிப்பேட்டை சிப்காட் அருகே தீக்குளித்து பெண் தற்கொலை செய்து கொண்டார்.
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை மாவட்டம் ராணிப்பேட்டை அடுத்த சிப்காட் அருகே உள்ள சீக்கராஜபுரம் மோட்டூர் கிராமத்தைச் சேர்ந்த ரவிச்சந்திரன் மனைவி ஜெயலட்சுமி (50).
கடந்த 8&ந் தேதி ஜெயலட்சுமி தன் உடலில் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ பற்ற வைத்துக் கொண்டார். ஆபத்தான நிலையில் இருந்த அவரை உடனடியாக மீட்டு வேலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் தீவிர சிகிச்சை அளித்தும் பலன்யின்றி நேற்று ஜெயலட்சுமி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து சிப்காட் போலீஸ் சப்-&இன்ஸ்பெக்டர் தாசன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
ராணிப்பேட்டை அடுத்த சிப்காட் அருகே உள்ள திரவுபதி அம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த ரத்தினம் மனைவி கஸ்தூரி (75) இவர்களுக்கு ஒரு மகன் ஒரு மகள் உள்ளனர்.
இந்த நிலையில் உடல்நலம் சரியில்லாமல் இருந்த கஸ்தூரி தனது வீட்டின் அருகில் இருந்த விவசாய கிணற்றில் தவறி விழுந்து நீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து தகவலறிந்த சிப்காட் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் தாசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.