உள்ளூர் செய்திகள்
மேலாண்மைக்குழு கூட்டம் பேரூராட்சி தலைவர் சரவணன் தலைமையில் நடந்த காட்சி.

கீழ்பென்னாத்தூரில் பள்ளி மேலாண்மைக்குழு மறுசீரமைப்பு கூட்டம்

Published On 2022-03-21 14:55 IST   |   Update On 2022-03-21 14:55:00 IST
கீழ்பென்னாத்தூர் பகுதியில் பள்ளி மேலாண்மைக்குழு மறுசீரமைப்பு கூட்டம் பெற்றோர்கள் முன்னிலையில் நடந்தது.
கீழ்பென்னாத்தூர்:

கீழ் பென்னாத்தூரில் உள்ள அரசு பள்ளிகளில் பள்ளி மேலாண்மை குழு மறுசீரமைப்பு கூட்டம் நடந்தது. கீழ்பென்னாத்தூர் அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடந்த பள்ளி மேலாண்மை குழு மறுசீரமைப்பு கூட்டத்திற்கு பேரூராட்சி தலைவர் சரவணன் தலைமை தாங்கினார். 

பள்ளி தலைமையாசிரியர் ராமச்சந்திரன் அனை வரையும் வரவேற்றார். ஒருங்கிணைந்த கல்வி மாவட்ட உதவி திட்ட ஒருங்கிணைப் பாளர்மலர்விழி கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். மாணவர்களின் ஒழுக்கத்தை குறித்தும், பெற்றோர்கள் அடிக்கடி பள்ளி ஆசிரியர்களுடன் தொடர்பு கொண்டு மாணவர்களின் நடவடிக்கைகளை கண்காணிக்க வேண்டும் என்றும் பள்ளி தேர்ச்சி சதவீதத்தை அதிகரிக்கும் வகையிலும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் அறிவுரையும், ஆலோசனைகளும் கூறினார். 

பேரூராட்சி கவுன்சிலர் பாக்யராஜ், கனகா பார்த்திபன், உதவி தலைமை ஆசிரியர்கள் பிரசன்னா, கேசவன், சக்திபாலா, ஆசிரியர் சங்க செயலாளர் முருகன், சீனிவாசன், திமுக நிர்வாகிகள் வினோத், மணி, ராஜேஷ் மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர். 

அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற கூட்டத்திற்கு பேரூராட்சி தலைவர் சரவணன் தலைமை தாங்கினார். துணை தலைவர் தமிழரசி சுந்தரமூர்த்தி, வார்டு கவுன்சிலர்கள் பாக்யராஜ், கவிதா ஏழுமலை முன்னிலை வகித்தனர்.

பள்ளி வளர்ச்சி குறித்தும் பள்ளி மாணவிகளின் நலன்கள் குறித்தும், கல்வி வளர்ச்சி குறித்தும் பள்ளி தலைமை ஆசிரியை சுமதி பெற்றோர்களுக்கு அறிவுரையும், ஆலோசனைகளும் கூறி சிறப்புரை ஆற்றினார். 

பேரூராட்சி கவுன்சிலர்கள் ஜீவா, மல்லிகா மயில்வாகனன், பி.கா. ஏழுமலை, அம்பிகாராமதாஸ், உதவி தலைமையாசிரியர்கள் குமரேசன், ஏழுமலை மற்றும் ஆசிரியர்கள் பெற்றோர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர். மேக்களூர் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் நடந்த பள்ளி மேலாண்மை குழு கூட்டத்திற்கு பள்ளி தலைமை ஆசிரியை வளர்மதி தலைமை தாங்கினார். 

உள்ளாட்சி பிரதிநிதிகளும் பெற்றோர்களும் ஆசிரியர்களும் கலந்து கொண்டனர். இதேபோல், பள்ளி மேலாண்மை குழு மறுசீரமைப்பு கூட்டங்கள் பெற்றோர்களுடன் கீழ்பென்னாத்தூர் பேரூராட்சி ராஜாதோப்பு கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக் கப்பள்ளியில் பேரூராட்சி கவுன்சிலர் பலராமன் தலைமையில், தலைமை ஆசிரியர் பானுமதி முன்னிலையிலும், கீழ்பென்னாத்தூர் ஒன்றியம் ஆராஞ்சி கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஒன்றியக்குழு துணை தலைவர் வாசுகி ஆறுமுகம் தலைமையிலும், தலைமை ஆசிரியர் அமுதா முன்னிலையிலும், காட்டுமலையனூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஊராட்சி மன்ற தலைவர் ரங்கநாயகி அருணாசலம் தலைமையிலும், தலைமை ஆசிரியர் பால் தங்கம் முன்னிலையிலும் நடந்தது. 

கீழ்பென்னாத்தூர் ஒன்றியம், நீலந்தாங்கல் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில், பள்ளி மேலாண்மைக்குழு& மறுசீரமைப்பு கூட்டம் ஒன்றியக்குழு கவுன்சிலர் அனுராதா சுகுமார் தலைமையில் நடந்தது. 

தலைமை ஆசிரியர் சுமதி, உதவி தலைமை ஆசிரியர் பொற்கொடி, ஊராட்சி செயலாளர் சங்க மாவட்ட தலைவர் சுகுமார், பெற்றோர்கள், ஆசிரியர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Similar News