உள்ளூர் செய்திகள்
கந்தர்வகோட்டையில் பள்ளி மேலாண்மை குழு கூட்டம்
கந்தர்வகோட்டை அரசு பள்ளிகளில் மேலாண்மை குழு கூட்டம் நடை பெற்றது.
புதுக்கோட்டை:
கந்தர்வகோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் அனைத்து அரசு ஆரம்பப்பள்ளி, தொடக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் கலந்து கொண்ட பள்ளி வளர்ச்சிக்கான மேலாண்மை குழு கூட்டம் நடை பெற்றது.
கந்தர்வகோட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நடை பெற்ற கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் தமிழ்செல்வி தலைமை தாங்கினார். பள்ளி தலைமை ஆசிரியை விஜயலட்சுமி முன்னிலை வகித்தார்.
இந்த கூட்டத்தில் பெற்றோர் ஆசிரியர் சங்கத்தலைவர் பத்மா மற்றும் ஆசிரியர்கள் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.
கந்தர்வகோட்டை அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற கூட்டத்திற்கு கிராம கல்வி குழு தலைவர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார்.
பள்ளி தலைமை ஆசிரியர் பழனிவேல் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் பெற்றோர் கள், ஆசிரியர்கள் மற்றும் கல்விக்குழு உறுப்பினர்கள் மேலாண்மைக்குழு உறுப்பினர்கள், கலந்து கொண்டனர். அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற கூட்டத்திற்கு தலைமை ஆசிரியர் சப்னம் தலைமை தாங்கினார்.
கூட்டத்தில் பள்ளிகளின் வளர்ச்சி, மாணவர்களின் கல்வி தரத்தை உயர்த்துவதற் கான வழிமுறைகள்மற்றும் மாணவர்களின் நடத்தை தொடர்பான பல்வேறு ஆலோசனைகள் பெறப்பட்டு அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
பெரும்பாலான பள்ளிகளில் போதிய அளவு கழிப்பறை வசதி மற்றும் விளையாட்டுத் திடல் குடிநீர் வசதி இல்லை என்று பெற்றோர்கள் கூறினர்.
கந்தர்வகோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் அனைத்து அரசு ஆரம்பப்பள்ளி, தொடக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் கலந்து கொண்ட பள்ளி வளர்ச்சிக்கான மேலாண்மை குழு கூட்டம் நடை பெற்றது.
கந்தர்வகோட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நடை பெற்ற கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் தமிழ்செல்வி தலைமை தாங்கினார். பள்ளி தலைமை ஆசிரியை விஜயலட்சுமி முன்னிலை வகித்தார்.
இந்த கூட்டத்தில் பெற்றோர் ஆசிரியர் சங்கத்தலைவர் பத்மா மற்றும் ஆசிரியர்கள் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.
கந்தர்வகோட்டை அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற கூட்டத்திற்கு கிராம கல்வி குழு தலைவர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார்.
பள்ளி தலைமை ஆசிரியர் பழனிவேல் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் பெற்றோர் கள், ஆசிரியர்கள் மற்றும் கல்விக்குழு உறுப்பினர்கள் மேலாண்மைக்குழு உறுப்பினர்கள், கலந்து கொண்டனர். அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற கூட்டத்திற்கு தலைமை ஆசிரியர் சப்னம் தலைமை தாங்கினார்.
கூட்டத்தில் பள்ளிகளின் வளர்ச்சி, மாணவர்களின் கல்வி தரத்தை உயர்த்துவதற் கான வழிமுறைகள்மற்றும் மாணவர்களின் நடத்தை தொடர்பான பல்வேறு ஆலோசனைகள் பெறப்பட்டு அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
பெரும்பாலான பள்ளிகளில் போதிய அளவு கழிப்பறை வசதி மற்றும் விளையாட்டுத் திடல் குடிநீர் வசதி இல்லை என்று பெற்றோர்கள் கூறினர்.