உள்ளூர் செய்திகள்
கும்பாபிஷேகம் நடைபெற்ற போது எடுத்தப்படம்.

கும்பாபிஷேகம்

Published On 2022-03-21 12:25 IST   |   Update On 2022-03-21 12:25:00 IST
கும்பாபிஷேகம் நடைபெற்றது.
புதுக்கோட்டை:

புதுக்கோட்டை நகரம் நீதிமன்ற பொது வளாகத்தில் அமைந்துள்ள ஸ்ரீ வேட்டைப் பெருமாள் கோவில் புனரமைக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடைப்பெற்றது.

கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த 18&ந் தேதி விநாயகர் பூஜையுடன் தொடங்கிய பூஜைகள் தொடர்ந்து ஐந்து கால யாகசாலை பூஜைகள் நடத்தப்பட்டது.

அதனை தொடர்ந்து இன்று காலை 7மணிக்கு மேல் தீபாராதனையுடன் கடம் புறப்பட்டு 9.30 மணிக்கு கும்பாபிஷேகம் மற்றும் மூலவர் கும்பாபிஷேகம் நடைப்பெற்றது.

அதை தொடர்ந்து மஹா அபிஷேகம், மஹாதீபாராதனை காட்டப்பட்டு பிரசாதம் வழங்கப்பட்டது. இதை தொடர்ந்து அன்னதானமும் நடைப்பெற்றது. 

Similar News