உள்ளூர் செய்திகள்
வந்தவாசியில் நிவாரண தொகை கேட்டு மின் கோபுரத்தில் ஏறி விவசாயிகள் போராட்டம்
வந்தவாசியில் நிவாரண தொகை கேட்டு மின் கோபுரத்தில் ஏறி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர் போராட்டத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சேத்துப்பட்டு:
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி பாஞ்சரை. வெடால். ஆச்சமங்கலம். குணகம்பூண்டி. அகரம். ஆகிய கிராமங்களில் உள்ள விவசாய நிலத்தின் வழியாக உயர் மின் கோபுரங்கள் அமைக்கப்பட்டது.
மின் கோபுரங்கள் அமைக்கப்பட்ட விளைநிலத்திற்கு கடந்த 2 ஆண்டுகளாக இதுவரை நிவாரண தொகை வழங்கபடவில்லை. பல முறை விவசாயிகள் கேட்டும் நிவாரண தொகை கிடைக்கவில்லை.
இதனால் விரக்தியடைந்த விவசாயிகள் தெள்ளார் அருகே உள்ள பாஞ்சரை கிராமத்தில் உள்ள விவசாய நிலத்தில் குடியேறினர். தொடர்ந்து அங்கு 3-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று மாலை மின் கோபுரத்தில் ஏறி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர் போராட்டத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.