உள்ளூர் செய்திகள்
கைது

செய்யாறு அருகே 4-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொந்தரவு: போக்சோவில் ஆசிரியர் கைது

Published On 2022-03-21 04:58 GMT   |   Update On 2022-03-21 04:58 GMT
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே 4-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தது தொடர்பாக ஆசிரியரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
செய்யாறு:

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு, பருதிபுரத்தை சேர்ந்தவர் ராமலிங்கம் (வயது 57).

இவர் வெம்பாக்கம், அருகே உள்ள சட்டுவன்தாங்கல் கிராமத்தில் உள்ள அரசு ஆரம்பப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.

அந்தப் பள்ளியில் இவர் ஒருவர் மட்டுமே பணி செய்கிறார். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்புதான் அந்த பள்ளியில் ஆசிரியராகப் பணியில் சேர்ந்தார்.

இவர் 4-ம் வகுப்பு படிக்கும் ஒரு மாணவியை கடந்த சில நாட்களாக மிரட்டி பாலியல் தொந்தரவு செய்து வந்ததாக கூறப்படுகிறது.

ஒருநாள் வீட்டிற்கு அழுது கொண்டே சென்ற சிறுமியிடம் அவரது தந்தை கேட்டபோது பள்ளியில் நடந்தவற்றை கூறி சிறுமி அழுதுள்ளார்.

இதுகுறித்து சிறுமியின் தந்தை செய்யாறு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

இன்ஸ்பெக்டர் நந்தினி தேவி ஆசிரியர் ராமலிங்கம் மீது பாலியல் தொந்தரவு மற்றும் கொலை மிரட்டல் விடுத்ததாகவும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தார். இதையடுத்து போலீசார் ஆசிரியர் ராமலிங்கத்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News