உள்ளூர் செய்திகள்
அரக்கோணம் மத்திய தொழில் பாதுகாப்பு படையில் போலி சான்றிதழ் கொடுத்த பெண் போலீஸ் பணி நீக்கம்
அரக்கோணம் மத்திய தொழில் பாதுகாப்பு படையில் போலி சான்றிதழ் கொடுத்த பெண் போலீஸ் பணி நீக்கம் செய்யப்பட்டார்.
அரக்கோணம்:
அரக்கோணம் அடுத்த தக்கோலம் நகரி குப்பத்தில் மத்திய தொழில் பாதுகாப்பு படை மையம் (சி.ஐ.எஸ்.எப்) இயங்கி வருகிறது.
இங்கு பயிற்சி நிறைவு செய்யும் போலீசார் விமான நிலையங்கள், புராதான சின்னங்கள், அணுமின் நிலையம் உள்ளிட்ட முக்கிய இடங்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.
இந்த நிலையில் மேற்கு வங்கத்தை சேர்ந்த கைருனீஷாகாட்டூன் (வயது 26), என்பவர் அரக்கோணம் சி ஐ எஸ் எப்ல் போலீஸ் கான்ஸ்டபிள் பயிற்சிக்காக கடந்த ஆண்டு ஜூலை 1-ந் தேதி வந்து சேர்ந்தார்.
இவர் பயிற்சி பெற்று வந்த நிலையில் அவரின் சான்றிதழ் சம்பந்தப்பட்ட மாவட்டத்திற்கு அனுப்பி சரிபார்க்கப்பட்டது.
அதில் அவர் போலியான சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவர் பணியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டார்.
இதுகுறித்து சிஐஎஸ்எப் பயிற்சிப்பள்ளி இன்ஸ்பெக்டர் சீனி தக்கோலம் போலீசல் புகார் கொடுத்தார்.
அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.