உள்ளூர் செய்திகள்
தகுதிவாய்ந்த நபர்களுக்கு வங்கி மேலாளர் சிவாஜி நகைகளை திரும்ப அளித்தார்.

கீழ்பென்னாத்தூர் கூட்டுறவு வங்கியில் 382 பேருக்கு நகைக்கடன் தள்ளுபடி

Published On 2022-03-20 15:20 IST   |   Update On 2022-03-20 15:20:00 IST
கீழ்பென்னாத்தூர் கூட்டுறவு வங்கியில் 382 பேருக்கு நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டது.
கீழ்பென்னாத்தூர்:

தமிழகத்தில் கடந்த 2021-ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலின்போது, தேர்தலில் திமுக வெற்றிபெற்று ஆட்சி அமைத்தால் கூட்டுறவு சங்க வங்கிகளில் அடமானம் வைத்துள்ள 5 பவுன் தங்க நகைகளுக்கான கடன் தள்ளுபடி செய்யப்படும் என திமுக தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டு இருந்தனர்.

தேர்தலில் திமுக வெற்றிபெற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆட்சி அமைத்த பிறகு நகைக்கடன் தள்ளுபடி செய்வதற்கான நடவடிக் கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. 

இந்நிலையில், கீழ்பென்னாத்தூரில் உள்ள திருவண்ணாமலை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி கிளையில் நகைக்கடன் பெற்றுள்ளவர்களில் 382 நபர்கள் தமிழக அரசின் பொது நகைக்கடன் தள்ளுபடி பெற தகுதி உடையவர்கள் என வங்கி அறிவிப்பு பலகையில் பெயர் பட்டியல் வெளியிட்டனர்.

இதனை அறிந்த, வங்கி வாடிக்கையாளர்கள் பட்டியலை பார்த்தும், வங்கி மேலாளர் அறிவுரையின்படியும் நகைக்கடன் தள்ளுபடிக்கான சான்றிதழ் பெற நடவடிக்கை மேற்கொண்டனர். 

நகைக்கடன் தள்ளுபடி பெற தேவையான ஆவணங் கள் என நகைக்கடன் பெற்றதற் கான வங்கி ரசீது, நகைக்கடன் தாரரின் குடும்ப அட்டை நகல் சான்று, நகைக்கடன்தாரர் குடும்ப உறுப்பினர்களின் ஆதார் கார்டு நகல்கள் தேவை என வங்கி மேலாளர் தெரிவித்தார். 

தேவையான ஆவணங்களுடன் வந்த சம்மந்தபட்ட நபர்களுக்கு வங்கிமுறைப்படி பதிவு செய்து, நகைகளையும், நகைக்கடன் சான்றிதழையும் சம்மந்தப்பட்ட நபருக்கு கூட்டுறவுவங்கி மேலாளர் சிவாஜி வழங்கினார். 

காசாளர் சண்முகம், நகை மதிப்பீட்டாளர் ரவிச்சந்திரன் உடன் இருந்தனர். தள்ளுபடி செய்து, தமிழக அரசின் பொது நகைக்கடன் வாயிலாக, தள்ளுபடி செய்து மீட்கப்பட்ட நகைகளுடன் பொது மக்கள் மகிழ்ச்சியுடன் சென்றனர்.

Similar News