உள்ளூர் செய்திகள் (District)
தண்ணீர் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு சைக்கிள் பேரணியை கராத்தே சுந்தர்ராஜன் தொடங்கி வைத்த காட்சி.

தண்ணீர் திருவிழா

Published On 2022-03-20 05:50 GMT   |   Update On 2022-03-20 05:50 GMT
முத்து ரத்தின அரங்கம் மேல்நிலைப்பள்ளியில் தண்ணீர் திருவிழா நடைபெற்றது.
புதுச்சேரி:

புதுவை கவுண்டர்பாளையம் முத்து ரத்தின அரங்கம் மேல்நிலைப்பள்ளியில் தண்ணீர் திருவிழா நடை பெற்றது.

விழாவுக்கு நாட்டு நலப்பணித் திட்ட மற்றும் சமுதாய நலப்பணித்திட்ட  மாணவர்கள்  நீர் குடத்தை   வரவேற்றனர். அதன் பிறகு தண்ணீர் அவசியத்தையும் தண்ணீர் பாதுகாப்பையும் விழிப்புணர்வு ஏற்படுத்தி சைக்கிள் பேரணி நடந்தது. 

இந்த பேரணி காந்திநகர், மருதம் நகர், ரோஜா நகர், கனகன் ஏரி சுற்றுலா பகுதிகளுக்கு சென்றது.

இந்நிகழ்ச்சியை பள்ளி அளவிலான நாட்டு 
நலப்பணித்திட்ட  ஒருங்கிணைப்பாளர் மதிவண்ணன், புதுவை மாநில கோஜு ரியூ  கராத்தே சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் கராத்தே சுந்தர்ராஜன், குளங்கள் காப்போம் குழுவின் தலைவர்  கார்த்தி கேயன், உறவுகள் காப்போம் குழுவை சேர்ந்த  தினேஷ், சூர்யா, மற்றும் ஊர் பெரியவர்   ஜெகதீஸ்வரன் மற்றும் பள்ளி முதல்வர் கவிதா சுந்தரராஜன், ஆகியோர் கொடியசைத்து சைக்கிள் பேரணியை   தொடங்கி வைத்தனர்.

 இதற்கான ஏற்பாடுகளை நாட்டு நலப்பணித் திட்டத்தின் ஒருங்கிணைப் பாளர்ஆசிரியர்  நெடுஞ்செழியன், சமுதாய நலப்பணித் திட்டத்தின் ஒருங்கிணைப்பாளர் ஆசிரியை முகிலரசி  மட்டும் பள்ளி பொறுப்பாளர்  ஜஸ்டின்  ஆகியோர் செய்திருந்தனர்.
Tags:    

Similar News