உள்ளூர் செய்திகள்
FILEPHOTO

சொத்து தகராறில் தம்பியை அரிவாளால் வெட்டிய அண்ணனை போலீசார் கைது செய்துள்ளனர்.

Published On 2022-03-20 11:02 IST   |   Update On 2022-03-20 11:02:00 IST
சொத்து தகராறில் தம்பியை அரிவாளால் வெட்டிய அண்ணனை போலீசார் கைது செய்துள்ளனர்.
புதுக்கோட்டை :

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே உள்ள வெட்டன் விடுதி வடக்குத் தெரு சேர்ந்தவர் கணேசன். இவரது மகன்கள் இயலரசன் (வயது 52). கலைச்செல்வம் (45). இவர்கள் இருவருக்கும் இடையே சொத்து பிரச்சினை தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்தது. இந்த நிலையில் மீண்டும் அவர்களுக்குள் தகராறு மூண்டது. இதில் ஆத்திரம் அடைந்த இயலரசன் தனது தம்பி  கலைச்செல்வத்தை அரிவாளால் வெட்டினார். 

இதில் அவரின் இடது கழுத்தில் பலத்த காயம் ஏற்பட்டது. ரத்த வெள்ளத்தில் சாய்ந்த அவரை உறவினர்கள் மீட்டு  அரசு மருத்துவமனையில்  சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 
இந்த சம்பவம் குறித்து கலைச்செல்வம் அளித்த புகாரின்பேரில் மழையூர் போலீஸ் சப்&இன்ஸ்பெக்டர் ராஜு வழக்குப்பதிவு செய்தார்.
 
பின்னர்  இயலரசனை கைது செய்து ஆலங்குடி மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி நல்லகண்ணன் முன்பு ஆஜர்படுத்தினர். நீதிபதி அவரை 15 நாள் காவலில் வைக்க உத்தரவிட்டார். இதையடுத்து போலீசார் அவரை ஜெயிலில் அடைத்தனர். சொத்து தகராறில் தம்பியை அண்ணன் அரிவாளால் வெட்டிய சம்பவம் அப்பகுதியில் பெரும்பரப்பை ஏற்படுத்தியது.   

Similar News