உள்ளூர் செய்திகள்
கல்லூரி மாணவர்களுக்கு மருத்துவ முகாம்
மாணவர்களுக்கு மருத்துவ முகாம் நடைபெற்றது.
புதுக்கோட்டை:
தமிழக அரசால் நடத்தப்படும் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் அறந்தாங்கி அரசு கலை அறிவியல் கல்லூரியில் பயிலக் கூடிய மாணவர்களுக்கு முழு உடல் மருத்துவ பரிசோதனை மற்றும் ரத்ததான முகாம் நடைபெற்று வருகிறது.
நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியை கல்லூரி முதல்வர் கண்ணன் தொடங்கி வைத்தார். முகாமில் மாணவர்களுக்கு ரத்தப் பரிசோதனை, ரத்த அழுத்தம் போன்ற நோய்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.
முகாமில் மருத்துவ அலுவலர் மருத்துவர் ஜெயஸ்ரீ, வட்டார சுகாதார மேற்பார் வையாளர் விஸ்வநாதன், மருத்துவ அலுவலர்கள் செவிலியர்கள் சுகாதாரத்துறை பணியாளர்கள், கல்லூரி நிதியாளர் மற்றும் துறை தலைவர்கள் பேராசிரியர்கள், நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் செந்தில்குமார், இளையோர் செஞ்சிலுவை சங்க ஒருங்கிணைப் பாளர் முனைவர் கணேஷ்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
தமிழக அரசால் நடத்தப்படும் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் அறந்தாங்கி அரசு கலை அறிவியல் கல்லூரியில் பயிலக் கூடிய மாணவர்களுக்கு முழு உடல் மருத்துவ பரிசோதனை மற்றும் ரத்ததான முகாம் நடைபெற்று வருகிறது.
நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியை கல்லூரி முதல்வர் கண்ணன் தொடங்கி வைத்தார். முகாமில் மாணவர்களுக்கு ரத்தப் பரிசோதனை, ரத்த அழுத்தம் போன்ற நோய்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.
முகாமில் மருத்துவ அலுவலர் மருத்துவர் ஜெயஸ்ரீ, வட்டார சுகாதார மேற்பார் வையாளர் விஸ்வநாதன், மருத்துவ அலுவலர்கள் செவிலியர்கள் சுகாதாரத்துறை பணியாளர்கள், கல்லூரி நிதியாளர் மற்றும் துறை தலைவர்கள் பேராசிரியர்கள், நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் செந்தில்குமார், இளையோர் செஞ்சிலுவை சங்க ஒருங்கிணைப் பாளர் முனைவர் கணேஷ்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.