உள்ளூர் செய்திகள்
ஆலங்குடி காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்த காதல்ஜோடி.

ஆலங்குடி காவல் நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சம்

Published On 2022-03-19 15:41 IST   |   Update On 2022-03-19 15:41:00 IST
ஆலங்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சம் அடைந்தனர்.

புதுக்கோட்டை:

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள பாரதி நகரை சேர்ந்த கணேசன் மகன் சிவா வயது 26 . இவர் தனியார் நிறுவன ஊழியர்.

இவர் தனது  உறவினர்  மகளான புதுக்கோட்டை மாவட்டம் கீழாநிலைக்கோட்டையை சேர்ந்த வெற்றி வேல் மகள் பிரசன்னாதேவி வயது 20 என்பவரை கடந்த 2 வருடமாக காதலித்து வந்துள்ளார்.

இவர்களின் காதலுக்கு பிரசன்னா தேவியின் வீட்டில் எதிர்ப்பு  தெரிவித்ததால் இருவரும் ஆலங்குடி அருகே உள்ள கீழாத்தூர்நாடியம்மன் கோவிலில் திருமணம் செய்து கொண்டனர்.

பின்னர் ஆலங்குடி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில்  பாதுகாப்பு கேட்டு தஞ்சமடைந்துள்ளனர்.

இது தொடர்பாக ஆலங்குடி அனைத்து மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் ஹேமலதா தஞ்சமடைந்த காதலர்களிடம்  விசாரணை நடத்தினர்.  

இதனை தொடர்ந்து இருவரது குடும்பத்திற்கும் போலீசார் தகவல் தெரிவித்தனர். பின்னர்,போலீஸ் நிலையம் வந்த இருவரது குடும்பத்தினரும் சமரச பேச்சில் ஈடுபட்ட போது பிரசன்னா தேவி குடும்பத்தார் ஏற்றுக்கொள்ளவில்லை.  

இதைத் தொடர்ந்து போலீசார் கணவர் சிவாவுடன்  பிரசன்னா தேவியைஅனுப்பி வைத்தனர்

Similar News