உள்ளூர் செய்திகள்
FILE PHOTO

இன்ஸ்பெக்டர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்

Published On 2022-03-19 10:02 GMT   |   Update On 2022-03-19 10:02 GMT
மாற்றுத்திறனாளியை தாக்கிய சம்பவத்தில் பெண் இன்ஸ்பெக்டர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார்.
புதுக்கோட்டை:

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை கவரப்பட்டி பகுதியை சேர்ந்தவர் சங்கர் (வயது 29). பார்வையற்ற மாற்றுத்திறனாளி. இவர் அப்பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி அருகாமையில் பெட்டிக்கடை வைத்துள்ளார்.
இந்த பகுதியில் கள்ளச்சந்தையில் பகல் மற்றும் இரவு நேரங்களில் மதுபானம் விற்பனை செய்யப்படுவதாகவும், அதனை தடுப்பதற்காக காவல் கட்டுப்பாட்டு  அறைக்கு சங்கர் தகவல் தெரிவித்தார்.


உடனே விராலிமலை போலீசார் சங்கரை ஜீப்பில் காவல்நிலையத்துக்கு அழைத்து சென்று  பல மணிநேரம் அடித்து-உதைத்தாக கூறப்படுகிறது.

இதுபற்றி அறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிஷாபார்த்திபன் சங்கரை தாக்கிய போலீஸ் காரர்கள் செந்தில்குமார், அசோக், பிரபு ஆகிய 3 பேரை பணியிடை நீக்கம் செய்து உத்தவிட்டார்.

இந்நிலையில் இன்று மத்திய மண்டல ஐ.ஜி. பாலகிருஷ்ணன், இச்சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தினார். இதனை தொடர்ந்து விராலிமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் பத்மாவை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்து உத்தரவிட்டார்.
Tags:    

Similar News