உள்ளூர் செய்திகள்
ஈத்தாமொழி அரசு மேல்நிலைப்பள்ளியில் கொரோனா தடுப்பூசி முகாம்
ஈத்தாமொழி அரசு மேல்நிலைப்பள்ளியில் கொரோனா தடுப்பூசி முகாம் நடந்தது
கன்னியாகுமரி:
ஈத்தாமொழி அரசு மேல் நிலைப்பள்ளியில் 12 முதல் 14 வயதுக்கு உட்பட்ட மாணவ-மாணவிகளுக்கு கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.
முகாமுக்கு ராஜாக்கமங்கலம் ஊராட்சி மன்ற துணை தலைவர் செல்லத்துரை முன்னிலை வகித்தார்.
வட்டார சுகாதார மேற்பார்வையாளர் டாக்டர் பிரீனா சுகுமார் தலைமையிலான மருத்துவ குழுவினர் மாணவ-மாணவிகளுக்கு தடுப்பூசி செலுத்தினர்.
முகாமில் பள்ளி முதல்வர், நர்சுகள், மருத்துவ துறை உதவியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.