உள்ளூர் செய்திகள்
போளூரில் பாலமுருகன் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா
போளூரில் பாலமுருகன் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா நடைபெற்றது.
போளூர்:
திருவண்ணாமலை மாவட்டம் போளூர் தாலுக்கா வில் அமைந்துள்ள. நற் குன்று ஸ்ரீபாலமுருகன் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா நடைபெற்றது.
ஸ்ரீ பால முருகனுக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. பிறகு மதியம் 12 மணிக்கு முருகன் வள்ளி தெய்வயானை திருமணம் கோலத்தில் காட்சி அளித்தார்.
மதியம் ஒரு மணியளவில் ஸ்ரீ ஜெய குரு நண்பர்களால் பொதுமக்களுக்கு அன்ன தானம் வழங்கப்பட்டது.
ஏராளமான பொதுமக்களும் கலந்து கொண்டனர் விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் ஏற்பாடு செய்திருந்தனர்.