உள்ளூர் செய்திகள்
ராமநத்தம் அருகே சாராயம் விற்ற பெண் கைது
ராமநத்தம் அருகே சாராயம் விற்ற பெண்ணை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 5 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.
ராமநத்தம்:
ராமநத்தம் அருகே உள்ள பட்டாக்குறிச்சி பகுதியில் ராமநத்தம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஸ்வநாதன் தலைமையிலான போலீசார் ரோந்து பணி மேற்கொண்டனர்.
அப்போது அதே பகுதியை சேர்ந்த வேல்முருகன் மனைவி மீனா(வயது 34) என்பவர் தனது வீட்டிலும், வீட்டின் அருகிலும் சாராயத்தை பதுக்கி வைத்து விற்பனை செய்துகொண்டிருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர். இதை அடுத்து மீனாவை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 5 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.
ராமநத்தம் அருகே உள்ள பட்டாக்குறிச்சி பகுதியில் ராமநத்தம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஸ்வநாதன் தலைமையிலான போலீசார் ரோந்து பணி மேற்கொண்டனர்.
அப்போது அதே பகுதியை சேர்ந்த வேல்முருகன் மனைவி மீனா(வயது 34) என்பவர் தனது வீட்டிலும், வீட்டின் அருகிலும் சாராயத்தை பதுக்கி வைத்து விற்பனை செய்துகொண்டிருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர். இதை அடுத்து மீனாவை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 5 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.