உள்ளூர் செய்திகள்
ஸ்ரீமுஷ்ணத்தில் தீ விபத்து- பேன்சி ஸ்டோர் எரிந்து நாசம்
ஸ்ரீமுஷ்ணத்தில் தீ விபத்தில் பேன்சி ஸ்டோரில் உள்ள ரூ.5 லட்சம் மதிப்பிலான பொருட்கள் நாசமானது.
காட்டுமன்னார்கோவில்:
காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள ஸ்ரீமுஷ்ணம் கடை வீதியில் பேன்சி ஸ்டோர் ஒன்று உள்ளது. நேற்று இரவு 9 மணி அளவில் மின்கசிவு காரணமாக இந்த கடையில் தீ விபத்து ஏற்பட்டது.
தீ மளமளவென பரவியதில் கடையில் இருந்த பொருட்கள் அனைத்தும் எரிந்து சாம்பலாகின. இதுகுறித்து ஸ்ரீமுஷ்ணம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து சுமார் 30 நிமிடம் போராடி தீயை அணைத்தனர்.
மேலும் அருகில் உள்ள கடைகளுக்கு தீ பரவாமல் தடுக்கப்பட்டது. இந்த தீ விபத்தில் பேன்சி ஸ்டோரில் உள்ள ரூ.5 லட்சம் மதிப்பிலான பொருட்கள் நாசமானது.
இந்த தீ விபத்து குறித்து ஸ்ரீமுஷ்ணம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.