உள்ளூர் செய்திகள்
கைது

வரதட்சணை கேட்டு பெண் சித்ரவதை- மாமனார், மாமியார் கைது

Published On 2022-03-18 16:10 IST   |   Update On 2022-03-18 16:10:00 IST
பண்ருட்டி அருகே வரதட்சணை கேட்டு பெண் சித்ரவதை செய்த புகாரில் மாமனார், மாமியாரை போலீசார் கைது செய்தனர்.
பண்ருட்டி:

விழுப்புரம் மாவட்டம் கலிஞ்சிகுப்பம் கிராமத்தை சேர்ந்தவர் பிரவீனா (வயது 21). இவருக்கும் பண்ருட்டி அருகே பில்லாலி தொட்டி கிராமத்தை சேர்ந்த ராஜசேகர் (30) என்பவருக்கும் கடந்த 2020-ம் ஆண்டு திருமணம் நடந்தது.

திருமணம் நடந்த 2-வது மாதத்திலிருந்து அதிகமாக வரதட்சணை கேட்டு பிரவீனாவை கணவர் வீட்டார் கொடுமைப்படுத்தியதாக புகார் எழுந்தது.

சம்பவத்தன்று 10 பவுன் நகை, ரொக்கம் ஒரு லட்சம் வேண்டும் என்று கணவர் மிரட்டியுள்ளார். இதுகுறித்து பிரவீனா அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

புகாரின் பேரில் போலீ சார் ராஜசேகர், அவரது தந்தை விநாயகம் (65) தாயார் மல்லிகா ஆகியோர் மீது வழக்கு பதிந்தனர். இதில் ராஜசேகரின் தாய்- தந்தை கைதானார்கள். ராஜ சேகரை போலீசார் தேடி வருகிறார்கள்.

Similar News