உள்ளூர் செய்திகள்
.

மூத்த மகள் இறந்ததால் விபரீதம்: இளைய மகளை கொன்று தாய் தற்கொலை

Published On 2022-03-18 15:26 IST   |   Update On 2022-03-18 15:26:00 IST
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டையில் மூத்த மகள் இறந்த சோகத்தில் இளைய மகளை கொன்று தாய் தற்கொலை செய்து கொண்டார்.
தேன்கனிக்கோட்டை, 

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே கொரட்டகிரி கிராமத்தை சேர்ந்தவர் ரவி (வயது 42). பொக்லைன்ஆபரேட்டர். இவரது மனைவி கங்கம்மா (36). இவர்களது மகள்கள் ராணி (17), மோனிஷா (7). மூத்த மகள் ராணி, தேன்கனிக்கோட்டை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்2 படித்து வந்தார்.

இந்த நிலையில் ராணி, சரியாக படிக்கவில்லை என்று கங்கம்மா திட்டியதாக கூறப்படுகிறது. இதில் மனமுடைந்த ராணி, கடந்த 11ந் தேதி எலி பேஸ்ட் தின்றுள்ளார்.

இதையடுத்து ராணியை மீட்டு, சேலம் அரசு ஆஸ்பத் திரியில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

இந்த நிலையில் மூத்த மகள் இறந்த துக்கம் தாங்காமல் கங்கம்மா இருந்து வந்துள்ளார். இதையடுத்து அவரை உறவினர்கள் அவரை தேற்றி வந்தனர்.

தொடர்ந்து மன அழுத்தத்தில் இருந்து வந்த கங்கம்மா, நேற்று முன்தினம் இளைய மகள் மோனிஷாவுக்கு எலி பேஸ்டை கொடுத்து, தானும் சாப்பிட்டுள்ளார். இதில் மயங்கி விழுந்த இருவரையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு ஓசூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று மோனிஷா, கங்கம்மா ஆகியோர் அடுத்தடுத்து இறந்தனர்.

இதுகுறித்த புகாரின்பேரில் தேன்கனிக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மூத்த மகள் இறந்த வேதனையில் இளைய மகளை கொன்று தாய் தற்கொலை செய்த சம்பவம் தேன்கனிக்கோட்டை பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Similar News