உள்ளூர் செய்திகள்
நாகை அருகே வீட்டின் கதவை உடைத்து 40 பவுன் நகைகள், ரூ.10 லட்சம் கொள்ளை
நாகை அருகே வீட்டின் கதவை உடைத்து 40 பவுன் நகைகள், 3Ñ கிலோ வெள்ளி, ரூ.10 லட்சம் கொள்ளையடித்த மர்ம நபர்களை போலீசார் தேடிவருகின்றனர்.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் மாவட்டம் சிக்கல் வடக்கு வீதியை சேர்ந்தவர் முருகன். வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி நாகலட்சுமி மற்றும் குடும்பத்தினர் இங்கு வசித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று அவரது குடும்பத்தினர் கோவில் விழாவிற்காக வெளியூர் சென்றுள்ளனர்.
பின்னர் இன்று காலை சொந்த ஊர் திரும்பிய அவர்கள் வீட்டிற்கு வந்து கதவை திறந்து உள்ளே சென்று பார்த்த போது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் வீட்டின் இருந்த பீரோவில் இருந்த 40 பவுன் நகைகள், 3Ñ கிலோ வெள்ளி, ரூ.10 லட்சம் ரொக்கம் மற்றும் டிவி உள்ளிட்டவைகளை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரிய வந்தது.
இதுகுறித்து அவர்கள் கொடுத்த தகவலின்பேரில் கீழ்வேளூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. அது சிறிது தூரம் ஓடி விட்டு நின்று விட்டது. யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. கைரேகை நிபுணர்கள் மர்மநபர்களின் தடயங்களை பதிவு செய்தனர்.
நள்ளிரவில் கொள்ளையில் ஈடுபட்ட கும்பல் எந்தவிதமான பதட்டமும் இல்லாமல் மின்விசிறியை போட்டு காற்று வாங்கிவிட்டு சென்றுள்ளனர். திருட்டு நடைபெற்ற வீட்டில் இருந்து 200 மீட்டர் தொலைவிலேயே கீழ்வேளூர் காவல் நிலையத்தின் கட்டுப்பாட்டில் உள்ள புறக்காவல் நிலையம் அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
நாகப்பட்டினம் மாவட்டம் சிக்கல் வடக்கு வீதியை சேர்ந்தவர் முருகன். வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி நாகலட்சுமி மற்றும் குடும்பத்தினர் இங்கு வசித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று அவரது குடும்பத்தினர் கோவில் விழாவிற்காக வெளியூர் சென்றுள்ளனர்.
பின்னர் இன்று காலை சொந்த ஊர் திரும்பிய அவர்கள் வீட்டிற்கு வந்து கதவை திறந்து உள்ளே சென்று பார்த்த போது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் வீட்டின் இருந்த பீரோவில் இருந்த 40 பவுன் நகைகள், 3Ñ கிலோ வெள்ளி, ரூ.10 லட்சம் ரொக்கம் மற்றும் டிவி உள்ளிட்டவைகளை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரிய வந்தது.
இதுகுறித்து அவர்கள் கொடுத்த தகவலின்பேரில் கீழ்வேளூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. அது சிறிது தூரம் ஓடி விட்டு நின்று விட்டது. யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. கைரேகை நிபுணர்கள் மர்மநபர்களின் தடயங்களை பதிவு செய்தனர்.
நள்ளிரவில் கொள்ளையில் ஈடுபட்ட கும்பல் எந்தவிதமான பதட்டமும் இல்லாமல் மின்விசிறியை போட்டு காற்று வாங்கிவிட்டு சென்றுள்ளனர். திருட்டு நடைபெற்ற வீட்டில் இருந்து 200 மீட்டர் தொலைவிலேயே கீழ்வேளூர் காவல் நிலையத்தின் கட்டுப்பாட்டில் உள்ள புறக்காவல் நிலையம் அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.