உள்ளூர் செய்திகள்
குடியாத்தத்தில் காரில் வந்து பைக்கை திருடும் கும்பல்
குடியாத்தத்தில் காரில் வந்து பைக்கை திருடும் கும்பலை பிடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
குடியாத்தம்:
வேலூர் மாவட்டம், குடியாத்தம் பகுதியில் மற்றும் கடைகள், வணிக வளாகங்கள் முன்னே நிறுத்தி வைக்கப்படும் 3 சக்கர வாகனங்கள் திருட்டுப் போகும் சம்பவம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
வாகன உரிமையாளர்கள் இதுகுறித்து குடியாத்தம் டவுன் போலீசில் புகார் அளித்த வண்ணம் உள்ளனர்.
குடியாத்தம் செதுக்கரை ஆர்.எஸ்.ரோடு திருமலை நகர் பகுதியைச் சேர்ந்தவர் சந்தோஷ் வயது 27 தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவர் தனக்கு சொந்தமான மோட்டார் சைக்கிளை வீட்டின் முன் நிறுத்தியிருந்தார்.
நேற்று காலையில் வீட்டிற்கு வெளியே பார்த்தபோது தனது மோட்டார் சைக்கிள் காணாத கண்டு சந்தோஷ் அதிர்ச்சியடைந்தார் உடனடியாக அப்பகுதியில் உள்ள ஒரு கடையில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களை பார்த்தபோது காரில் வந்த ஒரு கும்பல் இறங்கி சர்வசாதாரணமாக வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பைக்கை திருடி செல்வது தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து சந்தோஷ் அப்பகுதியில் காவல்துறை சார்பில் அமைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்கள் குறித்து விசாரித்த போது அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்கள் செயல்படாமல் உள்ளது என கேட்டு அதிர்ச்சி அடைந்தார்.
மேலும் மோட்டார் சைக்கிள் திருடு போன சம்பவம் குறித்து குடியாத்தம் டவுன் போலீசில் புகார் அளித்துள்ளார் இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேலூர் மாவட்டத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பிரபல நகைக்கடையில் பல கோடி ரூபாய் மதிப்பிலான நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் ஒரு சில நாட்களிலேயே குற்றவாளி கைது செய்யப்பட்டு திருடப்பட்ட முழு நகையும் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த திருட்டை கண்டுபிடிக்க முக்கிய காரணமாக இருந்தது கண்காணிப்பு கேமராக்கள் தான்.
குடியாத்தம் பகுதியில் நகை கடை வியாபாரிகள், வர்த்தகர்கள், வணிகர் சங்கத்தினர், பல்வேறு தொண்டு அமைப்புகள், அரசியல் கட்சி பிரமுகர்கள், நிதி நிறுவனத்தினர் என அனைத்து தரப்பில் இருந்தும் சுமார் ரூ.20 லட்ச ரூபாய் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்க குடியாத்தம் நகர போலீசாரிடம் அளித்தனர்.
போலீசாரும் குடியாத்தத்தில் முக்கியமான பகுதிகளில் சுமார் 90 க்கும் மேற்பட்ட இடங்களில் மிகவும் உயர்ரக கண்காணிப்பு கேமராக்களை அமைத்தனர்.
ஆனால் தற்போது சில மாதங்களாக ஒரு சுமார் 20 க்கும் குறைவாகவே கண்காணிப்பு கேமராக்கள் இயங்குவதாகவும் முக்கியமான இடங்களில் உள்ள கண்காணிப்பு கேமராக்கள் இயங்குவது இல்லை எனவும் இதனால் இரண்டு சக்கர மற்றும் முக்கிய திருட்டு சம்பவங்களில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு சாதகமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்த கண்காணிப்பு கேமரா செயல்படாத பிரச்சினைகள் குறித்து இப்பகுதி பொதுமக்கள் உயரதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்றும் இதுவரை நடவடிக்கை இல்லை என ஆதங்கப்பட்டனர்.