உள்ளூர் செய்திகள்
பாணாவரம் அருகே பள்ளியில் கூடுதல் ஆசிரியர்கள் நியமிக்க கோரி மாணவர்கள் சாலை மறியல்
பாணாவரம் அருகே பள்ளியில் கூடுதல் ஆசிரியர்கள் நியமிக்க கோரி மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
நெமிலி:
ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் அடுத்த மேல் வீராணம் பகுதியில் செயல்பட்டுவருகிறது.
அரசு உயர்நிலைப் பள்ளியில் போதிய ஆசிரியர் இல்லாததை கண்டித்தும், பாதுகாப்பான வகுப்பறைகள் இல்லாததை கண்டித்தும் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் வகுப்பை புறக்கணித்தனர்.
பின்னர் பாணாவரம் காவேரிப்பாக்கம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
பாணாவரம் போலீசார் மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை சமரசம் செய்தனர்.
மாணவர்களின் மறியலால் 1 மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.