உள்ளூர் செய்திகள்
.

குழந்தையுடன் பெண் மாயம்

Published On 2022-03-17 17:22 IST   |   Update On 2022-03-17 17:22:00 IST
கிருஷ்ணகிரி மாவட்டம் பாரூர் அருகே குழந்தையுடன் மாயமான பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர்.
மத்தூர், 

கிருஷ்ணகிரி மாவட்டம், பாரூர் அடுத்துள்ள அனுமன்கோவில்பள்ளம் பகுதியை சேர்ந்தவர் திருமால். இவரது மனைவி மோனிகா (வயது20). இவர்களுக்கு ஒரு வயதில் அருணி என்கிற பெண் குழந்தை உள்ளது.

இந்த நிலையில் நேற்று மோனிகா கடைக்கு சென்று வருவதாக கூறி தனது குழந்தையுடன் சென்றார். பின்னர் வெகுநேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் அவர்களை உறவினர் வீடு உள்பட பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர். ஆனால் எங்கு தேடியும் அவர்கள் கிடைக்கவில்லை. 

இது குறித்து திருமால் பாரூர் போலீசில்  புகார் கொடுத் தார். அதன் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து மாய மான அவர்களை தேடி வருகின்றனர்.

Similar News