உள்ளூர் செய்திகள்
.

வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் தொந்தரவு செய்த லாரி டிரைவர் கைது

Published On 2022-03-17 17:04 IST   |   Update On 2022-03-17 17:04:00 IST
கிருஷ்ணகிரி மாவட்டம் கந்திகுப்பம் அருகே வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் சில்மிஷம் செய்த லாரி டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி, 

கிருஷ்ணகிரி மாவட்டம், கந்திக்குப்பம் அடுத்த ராசிப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் ஜோதி, (வயது48). கூலி தொழிலாளி. இவரது கணவர் வெங்கட்டப்பன் இறந்துவிட்ட நிலையில், இவர்களது இரு மகன்களும் பெங்களூருவில் தங்கி வேலை பார்த்து வருகின்றனர். 

இந்நிலையில், ஜோதி வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார். அதேபகுதியை சேர்ந்த லாரி டிரைவரான முருகேசன், 32 கடந்த, 14 நள்ளிரவில் ஜோதி வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து தொந்தரவு செய்துள்ளார். 

இதுகுறித்து ஜோதி அளித்த புகார்படி முருகேசனை கந்திக்குப்பம் போலீசார் கைது செய்தனர்.

Similar News