உள்ளூர் செய்திகள்
சத்துவாச்சாரி காந்தி நகர் சுரங்கப்பாதையில் ஒவியம் வரையப்பட்டு வரும் காட்சி.

வேலூர் மேம்பால சுவர்களில் கண்ணை கவரும் ஓவியம் வரையப்படுகிறது

Published On 2022-03-17 15:47 IST   |   Update On 2022-03-17 15:47:00 IST
வேலூர் மேம்பால சுவர்களில் கண்ணை கவரும் ஓவியம் வரையும் பணி தொடங்கியுள்ளது.
வேலூர்

வேலூர் மாநகரின் வழியாக தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளதால் அலுமேலுமங்காபுரம், வள்ளலார், சத்துவாச்சாரி, கலெக்டர் அலுவலகம், கிரீன் சர்க்கிள், ரெயில்வே மேம்பாலம், மற்றும் சிறிய மேம்பாலம், சேண்பாக்கம் மற்றும் கொணவட்டம் மேம்பாலங்கள் உள்ளன.

இந்த மேம்பால பக்கவாட்டு சுவர்களில் எப்போதும் விளம்பர போஸ்டர்கள், அரசியல் கட்சியினரின் பிறந்த நாள், நினைவு நாள் போஸ்டரை அச்சிட்டு வருகின்றனர். 

அவ்வப்போது போஸ் டர்களை அகற்றினாலும் மீண்டும் அங்கு போஸ்டர் ஒட்டுவது நடந்துகொண்டிருக்கிறது. இதற்கு மாற்று தீர்வாக 6 முக்கிய மேம்பாலங்களின் பக்கவாட்டு சுவர்களில் அழகிய ஓவியங்களை வரைந்து அழகுபடுத்த கலெக்டர் குமாரவேல் பாண்டியன் உத்தரவிட் டுள்ளார்.

வேலூர் நகரம் புதுப்பொலிவு பெறும் வகையில் மாவட்டத்தின் பெருமையையும் அரசின் திட்டங்கள் மக்களுக்கு எளிதாக சென்றடையவும், யார் மனதையும் புன்படுத்தாத வகையில் ஓவியங்கள் வரையபடுகிறது.

வேலூர் சத்துவாச் சாரியில் உள்ள மேம்பாலத்தில் இன்று இயற்கைக் காட்சியுடன் ஓவியங்கள் வரையும் பணி தொடங்கியது. மற்ற பாலங்களிலும் ஓவியங்கள் வரையப்படுகின்றன. இதன்மூலம் வேலூரில் உள்ள மேம்பால பகுதிகள் அழகாக மாறி வருகின்றன.

இந்த ஓவியங்கள் மீது எந்தவிதமான போஸ்டர்களை ஒட்டக்கூடாது என தெரிவித்துள்ளனர். மேலும் வேலூர் மாநகர பகுதியில் உள்ள மேம்பாலம் சுவர்களில் விளம்பரங்கள் எழுதுவது நோட்டீஸ் ஓட்ட தடைவிதிக்கப்பட்டுள்ளது. 

இதனை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப் பட்டுள்ளது.

Similar News