உள்ளூர் செய்திகள்
காட்பாடி ரெயில்வே மேம்பாலத்தில் நாளை முதல் போக்குவரத்து மாற்றம்
காட்பாடி ரெயில்வே மேம்பாலத்தில் கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு நாளை முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
வேலூர்:
காட்பாடி ரெயில் வே மேம்பாலத்தில் ஓடுத்தளத்தின் இணைப்புகள் வலுவிழந்துள்ளன. அதனை சீர் செய்ய ரெயில்வே நிர்வாகம் மற்றும் தேசிய நெடுஞ்சாலை துறை முடிவு செய்துள்ளது.நாளை முதல் ரெயில்வே மேம்பால பணிகள் தொடங்குகிறது.
இதனால் முதற்கட்டமாக ரெயில்வே மேம்பாலத்தில் கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் காட்பாடியில் இருந்து சித்தூர் திருப்பதி செல்லும் கனரக வாகனங்களுக்கு மாற்றுப்பாதை அறிவிக்கப் பட்டுள்ளது.
இதுதொடர்பாக வேலூர் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
காட்பாடி ரெயில்வே மேம்பாலம் சீரமைப்பு பணிகள் நடப்பதால் நாளை 18&ந் தேதி முதல் கனரக வாகனங்கள் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளன.
வேலு£ர் மாவட்ட அனுமதிச்சீட்டு பெற்ற சரக்கு வாகனங்கள் காட்பாடி சித்தூர் பஸ் நிறுத்தத்தில் திரும்பி வி.ஐ.டி.வழியாக இ.பி. கூட்டுரோடு, சேர்க்காடு வழியாக சித்து£ர் செல்ல வேண்டும்.
தென் மாவட்டங் களிலிருந்து திருவண்ணா மலை வழியாக சித்தூர் செல்லும் சரக்கு வாகனங்கள் போளூர், ஆரணி, ஆற்காடு, ராணிப்பேட்டை, சேர்காடு வழியாக சித்து£ர் செல்ல வேண்டும்.
கிருஷ்ணகிரி மாவட்டம் வழியாக சித்தூர் செல்லும் சரக்கு வாகனங்கள் பள்ளிகொண்டா, குடியாத்தம் வழியாக சித்து£ர் செல்ல வேண்டும்.
சித்தூரிலிருந்து தமிழகத்திற்கு வரும் வாகனங்கள் வேலு£ர் மாவட்ட அனுமதி பெற்ற சரக்கு வாகனங்கள் மட்டும் சேர்காடு வழியாக, இ.பி.. கூட்டுரோடு, வி.ஐ.டி. வழியாக வேலூருக்குள் வர வேண்டும்.
தென் மாவட்டங் களிலிருந்து சித்தூர் செல்லும் வாகனங்கள் சேர்காடு, ராணிப்பேட்டை, ஆற்காடு, ஆரணி, திருவண்ணாமலை வழியாக செல்ல வேண்டும்.
சித்தூரிலிருந்து கிருஷ்ணகிரி செல்லும் சரக்கு வாகனங்கள் குடியாத்தம், பள்ளிகொண்டா வழியாக கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு செல்லவும் மாற்று வழித்தடங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
ரெயில்வே மேம்பாலத் தில் இன்று முதல் ஒரு மாதத்திற்கு சீரமைப்பு பணிகள் நடக்கிறது.
முதற்கட்டமாக கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. தற்போது பஸ் மற்றும் ஆட்டோ கார் உள்ளிட்ட வாகனங்கள் வழக்கம் போல் செல்ல அனுமதிக்கப்படுகிறது.
மேம்பாலத்தில் பணிகள் முழுமையாக நடைபெறும்போது பஸ் போக்குவரத்து ரத்து செய்யப்படும்.
பஸ் போக்குவரத்தில் மாற்றம் குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.